Skip to main content

அதிமுக ஐ.டி விங் நிர்வாகியை தாக்கிய அமமுக பிரமுகர்! 

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

AMMK Memeber who hit ADMK IT wing executive!

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக வடகிழக்கு பருவமழையின் காரணமாக கனமழை பெய்து, 10 வருடங்களுக்குப் பிறகு மாவட்டத்தில் உள்ள ஏராளமான கண்மாய்கள், ஏரி, குளங்கள் நிரம்பி, உடைப்பெடுத்து காட்டாறுகள் சென்றுகொண்டிருக்கிறது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அதிகாரிகளே போக்குவரத்தை தடை செய்துள்ளனர். மேலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிவிப்புகள் வெளிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் நிரம்பியுள்ள ஏரி குளங்களை விஜயபாஸ்கர் சென்று பார்த்துவருகிறார். நேற்று (28.11.2021) குளத்தூர் பெரிய கண்மாயில் தண்ணீர் நிரம்பியுள்ளதைப் பார்க்க விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அதிமுகவினர் சென்றனர். அப்போது விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் பிரபாகரனும் தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார். இருவரும் ஒன்றாக ஏரியைப் பார்த்தனர்.

 

AMMK Memeber who hit ADMK IT wing executive!

 

அந்த சந்திப்பு பற்றி அதிமுக ஐ.டி. விங் சமூகவலைதளங்களில் சிலர் அமமுகவினருக்கு எதிரான பதிவுகளைப் போட்டதால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அமமுக பிரமுகர் தாக்கியதில் அதிமுக ஐ.டி. விங் ஆறுமுகம் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

 

இது சம்மந்தமாக புகார் வேண்டாம் என்று இருதரப்பினரும் சமாதானப் பேச்சுவாராத்தையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கருத்தறிய ஆறுமுகத்தை தொடர்புகொண்டபோது, சிறிது நேரத்தில் பேசுவதாக கூறியவர் பிறகு தொடர்பில் வரவில்லை. இந்த சம்பவம், புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக - அமமுக இணைவதை தொண்டர்கள் ஏற்கவில்லை என்பதைக் காட்டுவதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.