அமமுக கட்சியின் செயலாளர் டி.டி.வி தினகரன் தனது கட்சி சார்பில் போட்டியிடும் மக்களவை தொகுதி குறித்து அறிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fghffgf.jpg)
அமமுக சார்பில் நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக ஞான.அருள்மணி என்பவரை அக்கட்சியின் செயலாளர் டி டி வி தினகரன் அறிவித்திருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hsdsh.jpg)
ஞான.அருள்மணி நெல்லை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவில் செயலாளராக உள்ளவர். திசையன்விளை அருகே உள்ள சௌந்திரபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இவர். இவர் தற்போது சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fgbhfgh.jpg)
அதற்கடுத்து தென்காசி(தனி) மக்களவை தொகுதியில் வேட்பாளராக பொன்னுத்தாயி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்டவர் இவர். இதற்கு முன்பு ராஜபாளையம் யூனியனின் முன்னாள் சேர்மேனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)