தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 தேதி நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் அவர்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி அமமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 தேதி நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் அவர்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி அமமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
Next Story
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும், எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார்.
அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.
Next Story
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டி பகுதியில் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''சாதம் வடிக்க வேண்டும் என்றால் குக்கரில் தான் வடிக்க வேண்டும். குக்கரை பார்த்த உடனே டிடிவி தினகரன் ஞாபகம் வர வேண்டும். இந்த முறை என்னை வெற்றிபெறச் செய்வீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் குக்கர் ஜெயிக்கணும். எப்படி ஆர்கே நகரில் ஜெயிச்சு டெபாசிட் போக வைத்ததோ அப்படி பணம், காசு எல்லாவற்றையும் தாண்டி குக்கர் ஜெயிக்க வேண்டும்.
இன்னும் சில பேர் ஓட்டு கேட்க வருவார்கள். மோடி தான் இந்தியாவிற்கு மூன்றாவது முறையாக பிரதமராக வர இருக்கிறார். இந்த தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல். யார் இந்தியாவுடைய பிரதமர் என்பதற்கான தேர்தல். இந்த தேர்தலில் மோடிதான் எங்களுடைய பிரதமர் என்று ஓட்டு கேட்கலாம். மற்ற கூட்டணிகள் யாரைச் சொல்லி ஓட்டு கேட்கப் போகிறது? உதயசூரியனில் யாரைச் சொல்லிக் கேட்க போகிறார்கள்? நீங்கள் வந்தால் கேட்க வேண்டும். உங்களுக்கு யாருப்பா பிரதமர் வேட்பாளர் என்று கேட்க வேண்டும். இன்னொரு கட்சி இரட்டை இலையை தூக்கிக்கொண்டு வரும். அவங்க என்ன பழனிசாமியை பிரதமராக்க போறாங்களா? திமுக வேட்பாளர் கூட எத்தனை அமைச்சர்கள் வந்தாலும் அவர்களிடம் கேளுங்கள் யார் உங்க பிரதமர் வேட்பாளர் என்று, ஜனநாயக நாட்டில் கேட்கலாமே?''என்றார்.