Skip to main content

திமுக,அதிமுகவை விட இந்த விஷயத்தில் அமமுக தான் டாப்!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்,18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது. வருகிற மே 19ஆம் தேதி  சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்,ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 22 தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் முடிவும், நாடாளுமன்ற தேர்தல் முடிவும் மே 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எந்த கட்சி பெரும்பான்மை பெறுகிறதோ அந்த கட்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் மிகவும் எதிர்பார்ப்புடன் இந்த தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொது மக்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

ttv



இதனால் அணைத்து கட்சியும் வேட்பாளர்களை மிகவும் கவனமுடன் தேர்ந்தெடுத்து உள்ளனர், குறிப்பாக வேட்பாளர்களின் பண பலம், தொகுதி செல்வாக்கு,மக்கள் பலம் என அணைத்தும் பார்த்து சீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.இதனால்  சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட்டுள்ள 22 அமமுக வேட்பாளர்களில் 19 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட  வேட்பாளர்களில் அதிமுக, திமுகவை விட அமமுகவில் தான் அதிகம் பேர்  கோடீஸ்வர வேட்பாளர்களாக உள்ளனர் என்ற செய்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள  திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, தேமுதிக, அமமுக என எல்லாமே பணபலம் இருக்கிற காட்சிகளாக பார்க்கப்படுகிறது . அணைத்து கட்சி சார்பிலும் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும் பணக்காரர்கள் தான் இருந்தனர். இதில் திமுக, அதிமுக ஆகிய காட்சிகளை விட அதிக அளவில் கோடீஸ்வரர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது அமமுக கட்சி தானாம்.  அதாவது 22 தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களில் 19 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் என்ற தகவல் வந்துள்ளது.  2வது இடத்தில் திமுகவும்,மூன்றாவது இடத்தில் அதிமுகவும் உள்ளது.மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பாக நிறுத்தப்பட வேட்பாளர்களில் பெரும்பாலோனோர் பணக்கார வேட்பாளர்கள் என்ற தகவலும் வந்துள்ளது.

இதில் டாப் 10 கோடீஸ்வர வேட்பாளர்களில் 4 பேர் திமுக, 3 அதிமுக, 3 அமமுக ஆகும். அவர்கள் விவரம்: சூலூரில் திமுகவின் பொங்கலூர் பழனிச்சாமி ( சொத்து ரூ. 44.66 கோடி). ஓசூரில் அதிமுகவின் ஜெயந்தி (ரூ. 26.43 கோடி), சூலூர் அமமுக வேட்பாளர் கே. சுகுமார் (ரூ. 19.45 கோடி), திருவாரூர் அமமுக எஸ். காமராஜ் (ரூ. 18.39 கோடி), ஆண்டிப்பட்டி திமுக ஏ மகாராஜன் (ரூ. 15.24 கோடி), ஆண்டிப்பட்டி அமமுக ஏ லோகிராஜன் (ரூ. 13.17 கோடி), பூந்தமல்லி திமுக ஏ கிருஷ்ணசாமி (ரூ. 12.34 கோடி), திருப்பரங்குன்றம் டாக்டர் பி. சரவணன் திமுக ( ரூ. 12.11 கோடி), சாத்தூர் அதிமுக ராஜ வர்மன் (ரூ. 7.95 கோடி), அரவக்குறிச்சி அமமுக ஷாகுல் ஹமீது (ரூ. 6.07 கோடி).இதனை தேர்தல் சீர்திருத்த இயக்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.