Skip to main content

திமுகவில் நிர்வாகிகள் பற்றாக்குறை உள்ளது: டிடிவி தினகரன்

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். 
 

அப்போது அவர், குடிநீர் பிரச்சனை வெளியே தெரியக்கூடாது என்பதற்காகத்தான் எங்கள் கட்சியில் இருந்து வெளியே சென்ற நிர்வாகியை பற்றிய செய்தியை பூதாகரமாக்குகிறார்கள். அவரை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று சொன்னேன். இப்போது அது தெரிந்துவிட்டது. என்னையும், கட்சியையும் டேமேஜ் பண்ணனும் என்பது தங்க தமிழ்செல்வனுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட். அதனால் அதனை செய்திருக்கிறார். அங்கு நிர்வாகிகள் பஞ்சம். எங்களிடம் உள்ளவர்களை கூப்பிடுகிறார்கள். அப்படித்தான்பார்க்க வேண்டும். எங்கிருந்தாலும் வாழ்க. 


  thanga tamilselvan mkstalin-ttv


 

தேனி நிர்வாகிகளை கூட்டி அதிமுகவுக்கு போய்விடலாம், இதனை அண்ணனிடம் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார் தங்க தமிழ்செல்வன். இதனை தேர்தல் முடிந்து சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது தேனி நிர்வாகிகள் இதனை என்னிடம் தெரிவித்தனர். எனக்கு இதுவரை ஒன்று தெரியவில்லை. அதனை தங்க தமிழ்செல்வன்தான் விளக்க வேண்டும். எதற்காக எங்களுடன் வந்தார் என்று தெரியவில்லை. அவருடைய செயல்பாடுகளை வைத்து சொல்கிறேன். எதற்காக இந்தப் பக்கம் வந்தார் என்று தெரியவில்லை. 


 

ஆறு மாதமாக தங்க தமிழ்செல்வன் நடவடிக்கையை பார்த்து சொல்கிறேன். எதற்காக இந்தப் பக்கம் வந்தார் என்று தெரியவில்லை. இவருக்கு யார் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்தீர்கள் என்று எல்லோரும் கேட்கின்றனர். எல்லாருக்கும் பதவி கொடுத்தபோது, இவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்கச் சொன்னது செந்தில் பாலாஜிதான். அது எல்லோருக்கும் தெரியும். அவர் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்துவிட்டார். அவரை யார் இயக்கினார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அதிமுக, திமுக இரண்டு பக்கமும் பேசினார். அதிமுக பக்கம் அவரை சேர்த்துக்கொள்ளவில்லை. 
 

உங்களிடம் இருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் திமுக பக்கம் போய்விடுகிறார்கள். திமுகவும் அவர்களை அழைக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன? 
 

எங்களுடன் இருப்பவர்களை அழைக்கிறார்கள். இதை பார்த்தால், அங்கு ஏற்கனவே நிர்வாகிகள் பஞ்சம் உள்ளது. ஆகையால் எங்களிடம் உள்ளவர்களை கூப்பிடுகிறார்கள். அப்படித்தான் பார்க்க வேண்டும். இவ்வாறு கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.