Skip to main content

ஊழல் பணத்தை பிரித்துக் கொள்ளவே தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி -அமித்ஷா

Published on 14/02/2019 | Edited on 14/02/2019

 

amitshah


 


பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தமிழ்நாட்டில் தனது தேர்தல் சுற்றுப் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக  ஈரோட்டில் நடந்த நெசவாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் இன்று மதியம் கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது...

 
விரைவில் மக்களவை பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. நரேந்திரமோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு நாம் அனைவரும் உறுதி பூண்டு இருக்கிறோம். மக்களின் பங்களிப்போடு ஆட்சி நடக்கவேண்டும் என்பதே பாஜகவின் விருப்பமாகும். மக்களின் விருப்பம் என்ன, அவர்களின் கஷ்டங்கள் என்ன என்பதைக் கேட்டு அறிந்து அதனை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்ய வேண்டியது அவசியமாகிறது. அதனால் ஒவ்வொரு மாநில மக்களின் விருப்பத்தைக் கேட்டறிந்து அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் பா.ஜ.க. இறங்கியுள்ளது.


விசைத்தறி, கைத்தறி மற்றும் ஜவுளித்துறையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள், தொழிலாளர்களின் கருத்துக்களைக் கேட்க இங்கு வந்துள்ளேன். ஜவுளித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை போக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஜவுளித்துறையை முன்னேற்றுவதற்காக, ரூ 1230 கோடி நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. ஜவுளித்துறையை மேம்படுத்தி நாடு முழுமைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், 12 சதவீதம் தமிழகத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.  ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளித்துறை மேம்பாட்டுக்கு ரூ 394 கோடியில் மூன்று திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ரூ 121 கோடி மத்திய அரசின் பங்காகும். ஒருங்கிணைந்த ஜவுளித்துறை மேம்பாட்டிற்காக ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 17 ஜவுளி பூங்காங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ஆறு ஜவுளிப்பூங்கா பணிகள் முழுமையாக முடிந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


இந்த 17 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க ரூ 5614 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்காங்களால் 1.44 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. விசைத்தறியை மேம்படுத்த தமிழகத்திற்கு மட்டும் மத்திய அரசு ரூ 161 கோடி ஒதுக்கியுள்ளது. விசைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில், 65 சதவீதம் தமிழகத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறை மானியத்தில் எஸ்.டி.எஸ்.சி. சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 45 சதவீதம் வரை, மொத்தம் ரூ 36 ஆயிரம் கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக தமிழகத்திற்கு ரூ 826 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான நிதி ஒதுக்கீட்டில் இது 11 சதவீதமாகும். அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் திருப்பூருக்காக ரூ 487 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம் மூலம், எட்டு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக ரூ 18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 50 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.


 

amitshah

 


இந்த திட்டத்திலே ஏற்றுமதிக்காக ரூ 5728 கோடியும், மொத்த மூலதனம் 25 ஆயிரம் கோடியும் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்திற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் 12 சதவீத நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. நெசவு ஏற்றுமதி செய்யக்கூடியவர்களுடைய நலனுக்காக ரூ 3900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நெசவாளர்கள் மற்றும் ஜவுளித்துறையில் இருப்பவர்களுக்கு மத்திய அரசு இன்னும் பல பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. நெசவாளார்கள், விசைத்தறி உற்பத்தியாளர்கள் என ஜவுளித்துறையைச் சேர்ந்த அனைவரும் உங்கள் கருத்துகளை இங்கே தெரிவித்துள்ளீர்கள். இவை அனைத்துமே பாஜக தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு, வரும் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று நான் உறுதிகூறுகிறேன்.


இதற்கிடையே ராகுல்காந்தி தலைமையில் ஒரு பெரிய கூட்டணி அமைப்பதற்கான ஒரு திட்டம் உருவாகியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்கிறார். ஆனால், அவர்கள் கூட்டணியில் இருப்பவர்கள் அதனை ஏற்க மறுக்கின்றனர். அதனால், ஸ்டாலினின் விருப்பம் என்னவென்று நமக்கு புரியவில்லை.  இன்னொருபுறம், நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மிக வலிமை மிக்க கூட்டணியாக இருந்து கொண்டு இருக்கிறது. ஒருபுறம் தலைமையில்லாத, கொள்கையில்லாத, திட்டமில்லாத, ஊழல் பணத்தைப் பிரித்துக் கொள்வதற்காக ஒரு கூட்டணி ஏற்பட்டுள்ளது. மற்றொரு புறத்தில் நாட்டு மக்களுக்கு முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தக் கூடிய, அனைவரோடும் அனைவருக்குமான மேம்பாடு என்ற உறுதியான கொள்கை கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்துள்ளது.


திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தை முன்னேற்றுவதற்காக அமைக்கப்படவில்லை. இது ஊழலுக்கான கூட்டணியாக உள்ளது. தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடும் வகையில் வலுவான கூட்டணி விரைவில் அமையும். மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது என்று ஸ்டாலின் கேட்டுள்ளார். நான் அவருக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. பதில் அளிக்க வேண்டிய தேவையும் இல்லை. ஆனால், மத்திய அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது என்பதை  தமிழக மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

 
மத்தியில் திமுக பங்கேற்று இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசில் ரூ 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்தது. 13வது நிதிக்குழு மூலம் தமிழகத்திற்கு ரூ94 ஆயிரத்து 540 கோடி நிதி அளிக்கப்பட்டது. மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சியில் 14வது நிதிக்குழுவின் மூலமாக முத்ரா கடன் உள்ளிட்ட ஆறு திட்டங்கள் மூலம் ரூ 5 லட்சத்து 42 ஆயிரத்து 65கோடி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒதுக்கிய நிதியை விட 5.2 மடங்கு அதிகமாக பாஜக அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளது. திமுக பங்கேற்ற ஆட்சி மத்தியில் இருந்தபோது, தமிழகத்திற்கு ஏன் அநியாயம் இழைத்தீர்கள் என்பதற்கு ஸ்டாலின் மக்களிடம் பதில் கொடுக்க வேண்டும். அடுத்து வரவிருக்கிற ஐந்து ஆண்டுகளில், மேலும் உயர்ந்த இடத்திற்கு தமிழகத்தை அழைத்துச் செல்வோம் என நான் உறுதி அளிக்கிறேன். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.