Skip to main content

தமிழக அரசிடமிருந்து தப்பிக்க இடம் மாறிய அமித்ஷா! பரபரப்பு பின்னணி! 

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

AmitSha Avadi visit secrete

 

அரசுமுறைப் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு செல்வதற்காக 23-ந்தேதி இரவு சென்னை வந்தார். அவரது வருகையின்போது நடந்துள்ள இரண்டு சம்பவங்கள்தான் மாநில உளவுத்துறையினரால் உற்று நோக்கப்பட்டிருக்கின்றன.

 

கவர்னர் மாளிகையில் தங்காமல் ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். விருந்தினர் மாளிகையில் அமித்ஷா தங்கினார். இது குறித்து மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “புதுச்சேரி பயணம் முடிவானதுமே, டெல்லியிலிருந்து பெங்களூர் சென்று அங்கிருந்தபடி சென்னைக்கு வராமல் புதுச்சேரிக்கு செல்லலாம் என்றுதான் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பெங்களூர் பயணம் கட் ஆனது. காரணம், தமிழக அரசியல் சூழல், ஆட்சி சூழல் இரண்டையும் தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் விவாதிக்க நினைத்தார் அமித்ஷா. சென்னையில் முதல்நாள் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் புதுச்சேரி செல்ல தீர்மானிக்கப்பட்டது. சென்னையில் ராஜ்பவனில் அமித்ஷா தங்குவது எனவும், அன்றைய தினம் தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் ஆலோசிக்கவும் முடிவானது.


இதனை அறிந்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஒன்றிய உள்துறைக்கு ஒரு தகவல் அனுப்பியுள்ளனர். அதில், ’தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் பராமரிப்பிலும், மாநில காவல்துறை மற்றும் மாநில உளவுத் துறையின் பாதுகாப்பு கண்காணிப்பிலும் சென்னை ராஜ்பவன் இருக்கிறது. அதனால் அமித்ஷாவை மாநில உளவுத்துறையின் மூலம் தமிழக அரசு வேவு பார்க்கலாம். ராஜ்பவனில் தங்குவதை தவிர்க்கவும்’ என தகவல் தந்துள்ளனர். அதன்பிறகே, ராஜ்பவனை தவிர்த்து விட்டு மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் ஆவடி சி.ஆர்.பி.எஃப். விருந்தினர் மாளிகையில் தங்குவது என முடிவானது” என்று ஆவடி ரகசியத்தை சுட்டிக்காட்டினார்கள்.


சென்னை விமானநிலையத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணைப் பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பலரும் அமித்ஷாவை வரவேற்றனர். சால்வை கொடுத்த கராத்தே தியாகராஜனுடன் கையைப் பிடித்துக்கொண்டு அவர் பேசியதை சொன்ன விசயங்களை, உன்னிப்பாக கவனித்தார் அமித்ஷா.


இதனையடுத்து, அமித்ஷாவின் காரில் அண்ணாமலையும் சி.டி.ரவியும், அதற்கடுத்த காரில் கேசவ விநாயகம், அமைச்சர் முருகன், சுதாகர் ரெட்டியும் பயணித்தனர். ஆவடிக்கு சென்ற அமித்ஷா, விருந்தினர் மாளிகையில் மேற்கண்ட ஐவருடன் தி.மு.க. ஆட்சி குறித்து 2 மணி நேரம் விவாதித்துள்ளார். அப்போது தி.மு.க. அரசுக்கு எதிரான பல டாகுமெண்ட்டுகளை அமித் ஷாவிடம் காட்டி விவரித்திருக்கிறார் அண்ணாமலை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்