Skip to main content

ப.சிதம்பரத்திற்கு செக் வைக்க அதிரடி திட்டம் போட்ட அமித்ஷா... கோபத்தில் காங்கிரஸ்!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

ஊடகங்களிடம் பேட்டி எதுவும் கொடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் விதித்த ஜாமீனுக்கான நிபந்தனையை மீறி, ப.சிதம்பரம் மோடி அரசுக்கு எதிராகவும் வழக்குகள் தொடர்பாகவும் பேசி வருகிறார் என்று பா.ஜ.க. குற்றம்சாட்டி வருகின்றனர்.  இந்த நிலையில் அமித்ஷா தரப்பு இதை கூர்ந்து கவனித்து வருவதாக கூறுகின்றனர். மேலும் ப.சி.யின் பேட்டிகளைச் சுட்டிக்காட்டி, அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்துசெய்ய நடவடிக்கை எடுங்கள் என்று, அமித்ஷாவின் மத்திய உள்துறை அமைச்சகம், அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தி இருப்பதாக கூறுகின்றனர். 
 

bjp



இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், ப.சி.க்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தயாரித்து வருகிறார்கள். அதனால் அவர்கள் எந்த நேரத்திலும் நீதிமன்றத்தின் கதவைத் தட்டலாம் என்ற நிலை இருப்பதாக சொல்கின்றனர். இந்த நிலையில் தமிழகம் வந்த ப.சி.க்கு காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த வரவேற்பு அவருக்குப் புது தைரியத்தை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். சத்யமூர்த்தி பவனில், வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசிய ப.சிதம்பரம், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரத்துக்கு இணையாகத் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு பேச, அது சொந்தக் கட்சியினராலே காமெடி மீம்சாக மாற்றப்பட்டு, அதுவும் ஒரு பக்கம் வைரலாக பரவி வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.