Skip to main content

அதிமுக மீது கோபத்தை காட்டிய அமித்ஷா! பதறிய அமைச்சர்!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததில் பா.ஜ.க.வோடு அதன் கூட்டணிக் கட்சிகளும் பக்கபலமா நின்னுது. அதோடு பி.எஸ்.பி., ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் ஆதரித்தது. அ.தி.மு.க.வும் பா.ஜ.க. வழியில் நின்று இதை ஆதரிக்க வேண்டும் என்று  சென்னையிலிருந்து உத்தரவு போனதா ஒரு தகவல் பரவியது. இது பற்றி விசாரித்த போது, அ.தி.மு.க.வுக்கான உத்தரவெல்லாம் டெல்லியிலிருந்துதான் வருது. பா.ஜ.க. கொண்டு வரும் சட்டதிட்டங்களை ஆதரிக்கலைன்னா என்ன ஆகும் என்பதை முத்தலாக் விவகாரத்திலேயே அ.தி.மு.க. நல்லா உணர்ந்திடிச்சி.   

 

admk



பா.ஜ.க. அரசு ராஜ்யசபாவில் கொண்டுவந்த முத்தலாக் சட்ட திருத்த மசோதாவை, அ.தி.மு.க. எம்.பி..யான நவநீதகிருஷ்ணன் கடுமையா எதிர்த்துப் பேசினார். இதை பார்த்த அமித்ஷா, மத்திய அமைச்சர் பியூஷ்கோயலைக் கூப்பிட்டு, அ.தி.மு.க. உறுப்பினர் என்ன பேசறார்? முதல்ல நமக்கு எதிரா வாக்கைப் பதிவு பண்ணாமல், அவங்க எம்.பி.க்களை வெளி நடப்பு  பண்ணச் சொல்லுங்க. இல்லைன்னா,  தமிழக அமைச்சர்கள் வீட்டை ரெய்டு செய்து நாம் எடுத்த அஸ்த்திரங்கள் எல்லாம் ரெடியா இருக்கு. அதிலே ஒருத்தர் வசமா சிக்கியிருக்காரு. அதை வச்சி எல்லாரையும் பிடிச்சி உள்ளே போட்டுடுவோம்ன்னு சொல்லுங்கன்னு கர்ஜனை செய்தாராம். 


இந்தத் தகவல் அமைச்சர் தங்கமணி காதுக்குப் போக, அவர் நவநீதகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு, வெளிநடப்பு செஞ்சிடுங்கன்னு சொல்லிவிட்டார்.  அதனால்தான் முத்தலாக் மசோதாவை பா.ஜ.க.வால் நிறைவேத்த முடிஞ்சிது. அதனால் இப்ப காஷ்மீர் விவகாரத்தில் மறுபடியும் அமித்ஷாவின் கோபத்தை எதுக்கு சம்பாதிக்கணும்னு நினைச்சிதான், அ.தி.மு.க.வினர், பா.ஜ.க.வின் நடவடிக்கையை எடுத்த எடுப்பிலேயே ஆதரிச்சிப் பேசியிருக்காங்கனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.