Skip to main content

முதலமைச்சர் ஸ்டாலின் கேள்விக்கு வேலூரில் அமித்ஷா பதில்!

Published on 11/06/2023 | Edited on 11/06/2023

 

Amit Shah's answer to Chief Minister Stalin's question in Vellore!

 

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாவில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டார்.

 

அப்போது பேசிய அமித்ஷா, “தமிழர்களின் தொன்மையான செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்தது பிரதமர் மோடி தான். உலகின் எந்த நாட்டுக்கு பிரதமர் போனாலும் தமிழின் தொன்மையையும் பேசி வருகிறார். சமீபத்தில் காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்தி நமக்கும் அவர்களுக்கும் உள்ள உறவை பிரதமர் உரக்கக் கூறியுள்ளார். தமிழுக்காக வாழ்வதாக சொல்லும் திமுக பத்தாண்டு கால மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஆட்சியில் இருந்தார்கள். அதற்கு முன்பு 8 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். அப்போது சிஆர்பிஎஃப், சிவில் சர்வீஸ் தேர்வுகளை தமிழ் மக்கள் தமிழ் மொழியில் எழுத முடியாத நிலை இருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்த பின் தான் சிஆர்பிஎஃப், சிவில் சர்வீஸ் தேர்வுகளை தமிழக மக்கள் தமிழ் மொழியில் எழுத முடிகிறது. 

 

சீன அதிபர் எங்கும் செல்ல மாட்டார். அவர் இந்தியாவிற்கு வருவதாக சொன்ன போது பிரதமர் அவரை தமிழ்நாட்டிலுள்ள மகாபலிபுரத்துக்கு அழைத்து வந்தார். தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் என்னைப் பார்த்து கேள்வி கேட்கிறார். 9 ஆண்டுகள் நரேந்திர மோடி ஆட்சியில் என்ன செய்தோம் என்று பட்டியல் போடுமாறு கேட்கிறார். 2004ல் இருந்து 2014 வரை தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தது. உங்கள் அமைச்சர்கள் இருந்தார்கள். பத்தாண்டுகளில் தமிழகத்துக்கு கிடைத்த பங்களிப்பு தொகை 95 ஆயிரம் கோடி. ஆனால் 9 ஆண்டுகளில் நரேந்திர மோடி 2 லட்சத்து 47 ஆயிரம் கோடியை தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ளார். 

 

காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்த போது 58 ஆயிரம் கோடி தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் பாஜக அரசு பொறுப்பேற்ற 9 ஆண்டுகளில் 2 லட்சத்து 31 ஆயிரம் கோடியை மானியமாக கொடுத்துள்ளார்.  3 ஆவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் அமையவுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாஜகவிற்கு 25 தொகுதிகளை வென்று தர வேண்டும்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.