இந்திய அரசியலமைப்பு சட்டங்களை உருவாக்கிய சட்டமேதை அம்பேத்கரின் 63வது நினைவுநாளான இன்று நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். சென்னை துறைமுகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி, இந்திய குடியரசு கட்சியின் தலைவர் சே.கு.தமிழரசு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பாஜக சார்பில் வானதி சீனிவாசன் ஆகியோர் அவர்களது கட்சியினருடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.