Skip to main content

ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடு! ஓடும் முதலீட்டாளர்கள்! -பா.ஜ.க. இராம.ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு!

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 

Allotment within allotment! Investors on the run! -B.J.K. Rama Srinivasan's accusation!

 

விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுக அரசைக் கண்டித்து சிவகாசியில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்துவிட்டு,   அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன், விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  

 

“விருதுநகருக்கு மத்திய அரசின் ஜவுளிப்பூங்கா வருவதை தமிழக அரசு தடுக்கிறது. பா.ஜ.க. நடை பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.  நடை பயணம் நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் தலையில் கொட்டியிருக்கிறது. தமிழக அரசுக்கு கொஞ்சம்கூட வெட்கமில்லை. மக்கள் நலனில் அக்கறையும் இல்லை. திருவள்ளுவர் பெரியவரா? கலைஞர் பெரியவரா? திருவள்ளுவரைவிட 1 அடி கூடுதலாக கலைஞருக்கு 134 அடி ஏன்? இது தமிழக அரசின் ஆணவத்தைக் காட்டுகிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை இதற்கு அனுமதிக்கக் கூடாது, அனுமதிக்காவிட்டால் நான் வரவேற்பேன்; சந்தோசப்படுவேன், 2 லட்சம் கோடி முருகப்பா குரூப் ஏன் ஆந்திரா சென்றார்கள்? இங்கிருப்பதைவிட,  அங்கு எளிமையான முறை உள்ளது.  வரும் முதலீட்டாளர்களிடம் ஒதுக்கீடு எவ்வளவு என்று கேட்கிறீர்கள். அந்த ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடு எவ்வளவு என்று கேட்கின்றீர்கள்.  ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமென்று அஞ்சியே, முதலீட்டாளர்கள் தமிழகத்தை விட்டு அண்டை மாநிலத்திற்கு ஓடுகின்றனர்.

 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த ஓராண்டில் எத்தனை லாக்-அப் இறப்புகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நடைபெற்றுள்ளன,  இதில் திமுகவினர் எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும்.” இவ்வாறு பேட்டியளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.