Advertisment

கொள்கைகளை பறக்க விட்டுவிட்டு கூட்டணி பேசுகிறார்கள்: கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று கொடியேற்றினார். பின்னர் அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடையே உரையாற்றினார்.

Advertisment

kamal haasan interview

அப்போது அவர், பல இடங்களில் கொடி ஏறிக் கொண்டிருப்பதாகவும், அதை எங்கே ஏற்ற வேண்டும் என்ற இலக்கு மக்களுக்கு தெரியும். கடந்த ஓர் ஆண்டில் மக்கள் நீதி மய்யக் கட்சி வளர்ந்திருக்கிறது. மக்களுடனான தொடர்பை தாம் அதிகப்படுத்தி இருப்பதாகவும் மக்கள் தன்னை ஆசிர்வதித்து அனுப்பியிருப்பதாகவும் கூறினார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். கட்சிகள் தாங்களே சொல்லிக்கொள்ள கூடாது, மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் 24ம் தேதிக்கு பிறகு படிப்படியாக வெளியிடப்படும், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும், கொள்கைகளை பறக்க விட்டுவிட்டு கூட்டணி பேசுகிறார்கள்' என்று கூறினார்.

Alliance Kamal Haasan Makkal needhi maiam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe