Skip to main content

பாஜகவுடன் கூட்டணி? - ஓ. பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

Alliance with BJP O Panneerselvam discussion

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

 

இந்நிலையில் அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில், பாஜக உடனான கூட்டணி குறித்து தனது அணி நிர்வாகிகளுடன் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். ஆலோசனைக்குப் பிறகு பாஜக கூட்டணியில் தங்கள் அணி தொடர்கிறதா என்பது குறித்து அறிவிக்க உள்ளார். இது குறித்து ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மழைநீர் வடிகால் பணிக்கு செலவிட்ட கணக்கை தர தயாரா? - இபிஎஸ் கேள்வி

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 Are you ready to give an account of the amount spent on rainwater drainage work?-EPS question

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

 

nn

 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, பால் ஆகியவற்றை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உடனே இயல்பு நிலைக்கு திரும்ப அரிசி, பருப்பு, பால், மளிகை பொருட்களை வழங்க வேண்டும். தேவையான மருத்துவ வசதிகளையும் உடனடியாக தமிழக அரசு கொடுக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து உடனடியாக பால் கொள்முதல் செய்து தங்கு தடையின்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் சிறப்பு முயற்சி எடுத்து உடனடியாக நீரை அகற்ற வேண்டும். வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

 

மழை நீர் வடிகால் பணிகள், தொடர்ந்து  மீட்புப் பணிகள் நடக்கும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை அரசு வெளியிட வேண்டும். திமுக அரசு முழு அளவில் மீட்புப் பணியை மேற்கொள்ளாமல், நிவாரண உதவிகளை வழங்காமல் உள்ளது. மழைநீர் வடிகால் பணி முடிந்த ஒவ்வொரு இடத்துக்கும் செலவிட்ட தொகை கணக்கை தர தயாரா? சென்னையில் உள்ள 38,500 பிரதான சாலைகளின் 20,000 சாலைகளின் இப்போது வரை வெள்ளம் தேங்கியுள்ளது. மழைநீர் வடிகால் பணி முடிந்த இடங்களில் கால்வாய்களை சரியான முறையில் இணைக்க அரசு தவறிவிட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

குப்பைகள் போல மிதக்கும் கார்கள்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Cars floating like garbage

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு - வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் கார்கள் குப்பை போல மிதக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழை நீரில் அடித்து செல்லப்பட்ட கார்கள், தாம்பரத்தை அடுத்த கிஷ்கிந்தா சாலையின் ஓரத்தில் குப்பை போல மிதக்கின்றது. வண்டலூரில் இருந்து மீஞ்சூர் செல்லும் வெளிவட்ட சாலையின் ஓரத்தில் தேங்கிய மழை நீரில் கார்கள் மிதக்கும் காட்சிகள் வெளியான நிலையில், பலரும் அங்கு வந்து மிதக்கும் கார்களை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்