Skip to main content

''இவையெல்லாம் தான்தோன்றித்தனமாக இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் எடுக்கும் முடிவுகள்''- புகழேந்தி பேட்டி

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

'' All of these decisions are made spontaneously by the EBS and the corresponding OBS '' - Pukahendi interview

 

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் புகாரளித்த நிலையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''8 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் 15 ஆயிரம் கொடுத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தார்கள். கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டது. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நாங்கள் நேர்காணல் நடத்துவோம் என்று சொல்லிப் பணம் வாங்கியுள்ளனர். திமுக நேர்காணல் நடத்தியிருக்கிறது. மற்ற கட்சிகள் எல்லாம் நடத்தியிருக்கிறது பார்த்திருப்பீர்கள். ஆனால் இவர்கள் யாரிடமும் நேர்காணல் நடத்தவில்லை. பப்ளிக் மீட்டிங் போன்று எல்லோரையும் கூட்டி சில மணிநேரங்களில் அந்தக் கூட்டத்தை முடித்து, அவர்களாகவே வேட்பாளர்களை அறிவித்துக்கொண்டார்கள் என்பது முக்கியமான புகார். ஆட்சிமன்றக் குழு கூட்டப்படுவதே இல்லை. அதுதான் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

 

சில முக்கிய முடிவுகளை அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் சேர்ந்து எடுக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் செய்யாமல் தான்தோன்றித்தனமாக இபிஎஸ்சும், அவருக்கு ஒத்துப்போகின்ற ஓபிஎஸ்சும் எடுக்கின்ற முடிவுகள்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு, நேற்று (30.11.2021) அன்வர் ராஜாவை எடுத்தார்கள். என்னை அதற்குமுன்பே எடுத்தார்கள். எந்தக் காரணமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தூக்கி எறிகிறார்கள். சீனியராக இருக்கட்டும், யாராக இருந்தாலும் பரவாயில்லை என நீக்கிவிடுகிறார்கள். இதற்குக் காரணம் எல்லாம் கிடையாது. அவர்கள் வைத்ததுதான் சட்டம். அதிமுகவில் கட்சி விதிகளைத் திருத்தியது சட்டத்திற்கு முரணானது'' என்றார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.