Advertisment

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - பொள்ளாச்சி ஜெயராமன்

pollachi jayaraman

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

Advertisment

அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:–

அ.தி.மு.க.விற்கு பல்வேறு காலகட்டங்களில் சோதனைகள் நடைபெற்ற போதிலும், மீண்டும் எழுந்துள்ளது. சிலநேரங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. என்றாலும் நிரந்தர தோல்வி கிடையாது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறுகையில், எனக்கு பிறகும் இந்த கட்சி 100 ஆண்டு காலம் இருக்கும். மக்களுக்காக பாடுபடும் என்றார். எங்களை நம்பி சொல்லவில்லை. உங்களை நம்பித்தான் அவர் கூறினார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆத்மா மனித தெய்வங்களாக இருந்து கட்சியை காத்து வருகின்றனர். மக்கள் துணையிருக்கும் வரை எந்தக்கொம்பனாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது. இது ஏழைகளின் கட்சியாகும். அ.தி.மு.க.விலிருந்து ஒரு சிலர் பதவிக்காக வேறுகட்சிக்கு சென்றிருப்பார்கள். அவர்கள் தாயின் மடியில் இளைப்பார மீண்டும் வருவார்கள்.

வித்தை காட்டுபவர்களுக்கு கூட்டம் கூடும். அந்த கூட்டம் சில மணி நேரத்தில் கலைந்து விடும். உண்மையான தொண்டன் அ.தி.மு.க.வை விட்டு எங்கும் செல்ல மாட்டான். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

40 seats win aiadmk Pollachi Jayaraman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe