Skip to main content

234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்! -அமைச்சர் சீனிவாசன்

Published on 05/10/2020 | Edited on 05/10/2020

 

AIADMK will win in 234 constituencies! - Minister Srinivasan

 

 

234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக எதிர்க்கட்சியாக வருவதும் கூட சந்தேகம்தான் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருக்கிறார். 

 

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பாலகிருஷ்ணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை, பவர் பிளாக் சாலை, ஆழ்துளை கிணறு, மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட திட்டப் பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். 

 

அதன்பின் பாலகிருஷ்ணபுரம் விரிவாக்க பகுதி நீதிபதி காலனி, அனுமந்த நகர் தெற்கு மாலைப்பட்டி, ஸ்ரீநகர், அபிரமி நகர் தெற்கு ரங்கநாதபுரம், ராமர் காலனி உள்பட 15 இடங்களில் 10 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் 66 வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதேபோல் அந்த பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் பணியை அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

 

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசும்போது, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் நம்பித்தான் சிறப்பான ஆட்சி நடக்கிறது. அதே நேரத்தில் நாங்கள் எதை செய்தாலும் மத்திய அரசுக்கு துணை போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், மத்திய அரசு நல்லது செய்தால் ஆதரிப்பதையும்  தவறு செய்தால் கண்டிப்பதையும் தமிழக அரசு செய்து வருகிறது. தற்போது வேளாண்மைக்காக புதுமையான திட்டத்தை பிரதமர் அறிவித்திருக்கிறார். 

 

அது விவசாயிகளுக்கு பயன் தரும் திட்டம் என்பதால் தமிழக அரசு ஆதரிக்கிறது. ஆனால், ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூட்டத்தை கூட்டி மக்களை துன்புறுத்துகின்றனர். எதற்கெடுத்தாலும் குறைகளை சொல்லி மக்களை குழப்புவது ஸ்டாலினின் வேலையாக உள்ளது. முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்வதால் ஜெயலலிதாவுக்கு பிறகு மீண்டும் நல்லாட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் சூழல் உருவாகியிருக்கிறது. அதிமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் ஆனால் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு திமுக எதிர்க்கட்சியாக கூட வருமா என்பது சந்தேகம் தான். மக்கள் எதிர்பார்த்தபடி விலைவாசி உயராத, சட்டம் ஒழுங்கு கெடாத நல்லாட்சி தமிழகத்தில் நடக்கிறது இதற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.