Advertisment

ஒ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டம்! (படங்கள்)

Advertisment

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி, பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்ததாகத்தகவல் வெளியானது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஒருவர், அன்வர் ராஜாவைத் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்த கூட்டத்தில் டிசம்பர் முதல் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு அதிமுக அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் துவங்கியது. இந்நிலையில் நேற்று இரவு அதிமுகவிலிருந்து மூத்த உறுப்பினராக இருந்த அன்வர் ராஜா திடீர் என கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இன்று அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக மூத்த உறுப்பினர் தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ops_eps admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe