Skip to main content

அதிமுக மாவட்டச் செயலளார்கள் மாற்றம்?

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

 

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேனி தொகுதியைத் தவிர அனைத்து தொகுதியிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் படுதோல்வியை சந்தித்தது. நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்ததால் ஆட்சியை காப்பாற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதை நாங்கள் ஏற்கிறோம், ஆனால் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும். ஒரு தொகுதியில் மட்டுமே தேர்தல் நடக்கிறது. இதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, சிறப்பாக பணியாற்றி வெற்றி பெறுவதற்கான வழிகளை பாருங்கள் என நிர்வாகிகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் அறிவுறுத்தியுள்ளனர்.


  AIADMK OFFICE



இந்த நிலையில் சிலர் சரியாக பணியாற்றவில்லை என்றும், கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போதே சிலர் சரியாக பணியாற்றவில்லை என்ற தகவலும் ஆதாரங்களுடன் தலைமைக்கு வந்துள்ளது. வேலூர் தேர்தல் நெருங்கிவிட்டதாலும், தேர்தல் பணியில் எந்த பின்னடைவும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அதிமுக தலைமை தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் முடிந்தவுடன் அதிரடியாக அனைத்து மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் இதர நிர்வாகிகள் மாற்றத்தை ஏற்படுத்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் 25 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அரசிதழில் வெளியீடு 

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

Gazette 25 taluk as drought affected areas in Tamil Nadu

 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால் 33 சதவிதத்திற்கும் அதிகமாக பயிர்ச்சேதம் ஏற்பட்ட பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. புதுக்கோட்டை,சிவகங்கை,ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய இரு வட்டங்களும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை ஆகிய 4 வட்டங்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை ஆகிய 11 வட்டங்களும் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

மேலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 6 வட்டங்களும், தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ள ஆள்வார்திருநகரி வட்டமும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  நரிக்குடி, திருச்சுழி  என இரு வட்டங்கள் என மொத்தம் 25 வட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் வேளாண் வறட்சியால் பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அறிவித்து தமிழக அரசு சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Next Story

ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம் (படங்கள்) 

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று (15.05.2023) கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.