Skip to main content

“அவர் திமுகவிற்கு சென்ற பிறகு இங்கே திட்டத்தை நகர்த்த முடியவில்லை” - செங்கோட்டையன் பேச்சு

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

"After going to DMK, even he could not move the project here"-Sengottaiyan's speech

 

ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரம் அதிமுக தற்பொழுதுதான் வேட்பாளரை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  'ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், “கேட்டதைக் கொடுப்பவனே, கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்வார்கள். அதேபோல் நபிகளை பொறுத்தவரை 'இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை' என்று சொல்வார்கள். இயேசுநாதரை சொல்லும் பொழுது 'தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்' என்று சொல்வார்கள். ஆனால், கேட்காமலே கொடுக்கும் உள்ளங்கள் இங்கே நிறைந்துள்ளது.  எங்களை பொறுத்தவரை இங்கே சொல்வதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது.

 

எம்ஜிஆர் காலத்தில் இந்த மாவட்டம் பிரிக்கப்பட்டது. ஜெயலலிதா காலத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அதற்கு பிறகு எடப்பாடியின் ஆட்சியில் சிறந்த முறையில் அமைதியான முறையில் நான்காண்டு காலம் பல்வேறு சோதனைகளுக்கு இடையில் ஆட்சி சீரோடும் சிறப்போடும் அரவணைத்து செல்கின்ற ஆட்சியாக இருந்தது. நீங்கள் எல்லாம் அறிந்தவர்கள்; எல்லாம் தெரிந்தவர்கள். உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று தேவையில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஆட்சிக்கு வந்தாலும் இங்கு திட்டங்கள் நடைபெறுவதில்லை. ஈரோடு தொகுதியை பொறுத்தவரை அவர்கள் எடுத்துச் சொல்லட்டும் நாங்கள் இது போன்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம் என்று. ஒரு திட்டத்தை அவர்களால் சொல்ல முடியாது. முத்துசாமி அதிமுகவில் இருந்தபோது பல திட்டங்களைக் கொடுத்தார். ஆனால், அவர் திமுகவிற்கு சென்றதற்கு பிறகு அவராலும் கூட இங்கே ஒரு திட்டத்தையும் நகர்த்த முடியவில்லை.

 

இந்த தேர்தலில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியாது. கண்ணதாசன் ஒன்றைச் சொல்வார் 'பாலுக்குள் தயிர் இருக்கிறது; தயிருக்குள் வெண்ணெய் இருக்கிறது; வெண்ணெய்க்குள் நெய் இருக்கிறது; ஒன்றுக்கு ஒன்று உப்பிடுகிறது. ஆனால், மனிதன் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை' என்று கண்ணதாசன் சொன்னார். இதனால் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் என்ன இருக்கிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், உங்கள் உள்ளங்களில் எங்களை வாழ வைக்கும் எண்ணம் இருக்கிறது. ஆகவே வாழ வையுங்கள். நன்றி'' என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.