Skip to main content

குரங்கு என சொன்ன விவகாரம்; “மன்னிப்பு கேட்க முடியாது” - அண்ணாமலை திட்டவட்டம்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

The affair said to be a monkey; "Can't apologize" - Annamalai

 

கோவை கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு அருகில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “கோவையில் பெரும் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. கோவை மக்களின் வாழ்க்கைப் பயணம் நன்றாக இருக்க வேண்டும் என்று கந்த சஷ்டி கவசத்தினை ஒன்றாகப் பாடிவிட்டு கடவுள்களை  வேண்டிவிட்டு வெளியே வந்துள்ளோம். 

 

23ம் தேதி காலை 4 மணிக்கு அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் கோவை இதைத் தாண்டி செல்ல வேண்டும். தமிழகத்தில் முன்னணி நகரமாக இருந்த கோவை 1998 குண்டுவெடிப்பிற்குப் பிறகு பின்னோக்கி சென்றுள்ளது. மக்களும் தொழிலதிபர்களும் மறுபடியும் கோவையை முன்னெடுத்து சென்று கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இந்த வெடிகுண்டு விபத்து நடந்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்து பார்ப்பதற்கே ஒரு மாதிரி இருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினருக்கு நன்றிக்கடனை செலுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

 

சதிகாரர்கள் நம்மைப் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கோவை மக்கள் ஒன்றாக இருக்கின்றார்கள். சம்பந்தப்பட்டவர்களை முதல் நாளில் பாஜக கட்சி குற்றவாளிகள் என்று தான் சொல்லுகிறது. அவர்களுக்கு எவ்விதமான மதச் சாயமும் பூசவில்லை. 

 

மாநில அரசுக்கு கேள்விகளை வைப்பது அது நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகத் தானே தவிர அதற்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. பாஜகவைப் பொறுத்த வரை யாரையும் பிரித்து வலிமையைக் குறைத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் கிடையாது. பாஜகவின் அதிகாரப் பூர்வ நிலைப்பாடு அதிமுக உள்விவகாரத்தில் தலையிடமாட்டோம். 

 

எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறோம் என்று சொல்லக் கூடாது. சில நண்பர்கள் வரம்பு மீறும் பொழுது தான் இது போன்று நடக்கிறது. உங்களுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடு கிடையாது. பத்திரிகையாளர்களைப் பார்த்து யாரும் குரங்கு என்று சொல்லவில்லை. குரங்கு போல ஏன் தாவித் தாவி என்னைப் பேச விடாமல் செய்கிறீர்கள் என்று தான் சொன்னேன். அதனால், இரண்டும் வேறு. என்னைப் பொறுத்த வரை இரண்டும் ஒன்று கிடையாது. இவை அனைத்துமே உவமை. நான் தவறு செய்யவில்லை. என்னால் மன்னிப்பு கேட்க முடியாது” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.