Skip to main content

அதிமுக - பாமக கூட்டணியில் விரிசல்?

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

17ஆவது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்த நிலையில், மத்தியில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களில் வென்றுள்ளது. அதிருக்க அதிமுக கூட்டணியில் தேனி தொகுதி மட்டுமே வென்றுள்ளது.அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக,தேமுதிக ,பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அதிமுக கூட்டணி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.மேலும் தேர்தலுக்கு முன்பு பாமக கட்சிக்கு 7 நாடாளுமன்ற சீட்டும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கொடுக்கப்பட்டது.இந்த நிலையில் பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளதால் அதிமுக கூட்டணி அதிர்ச்சியடைந்துள்ளது.

 

pmk



இந்தநிலையில், அதிமுக தலைமை நிர்வாகிகள், அதிமுக ஆட்சி நீடிக்க தேவையான வெற்றியை அதிமுக பெற்றுவிட்டது. கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற நாம் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டோம். ஆனால் கூட்டணிக் கட்சிகள் நமக்காக பேருக்குத்தான் வந்தார்களே தவிர, சொல்லும்படி பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. கடைசியாக நடந்த நான்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்று பத்திரிகையில் விமர்சனம் வந்த பிறகு வந்தார்கள்.மேலும் பாமக ஒரு இடத்திலாவது வெற்றிப் பெற்றிருந்தால் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கியிருக்கலாம் இப்போது எப்படி என்று யோசித்து வருகிறார்களாம் அதிமுக நிர்வாகிகள். 


அதோடு,அதிமுக எம்பி மக்களவையில் ஒருவர்தான் இருக்கிறார். மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் நமக்கு வேண்டும் என்பதால் கூட்டணிக் கட்சிகள் யாருக்கும் இந்த ராஜ்ய சபா சீட்டை வழங்கக்கூடாது என்றும், இதனால் பாமகவிற்கு ராஜ்ய சபா சீட் கிடைப்பது சந்தேகம் என்று பேசி வருகிறார்கள். இதனால் அதிமுக, பாமக கூட்டணியில் விரிசல் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.