நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இருந்தலும் அதிமுக 9 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இந்த நிலையில் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில், 5 பவுன் வரையிலான நகைக்கடன் ரத்துங்கிற வாக்குறுதி கிராமப்பகுதிகளில் குறிப்பா பெண்கள்கிட்டே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒட்டுமொத்தமா ஜெயிச்சி, தி.மு.க. ஆட்சியைப் பிடிச்சிருந்தா இந்த வாக்குறுதியை நிறைவேற்றி, பெண்கள் ஓட்டுகளை தக்க வச்சிருக்கும்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இப்ப அதை அ.தி.மு.க. செய்ய நினைக்குது. கஜானா நிலைமை மோசம்னாலும், 5 பவுன் அல்லது 3 பவுன் வரையிலான கடன்களை ரத்து செய்தால், அது தேர்தலுக்கான ஜாக்பாட் திட்டமா அமையும்னு நினைக்கும் எடப்பாடி, அது சம்பந்தமா கூட்டுறவு வங்கிகளில் கணக்கு கேட்டிருக்காராம். அவரோட சேலம் மாவட்டத்திலும் பக்கத்திலுள்ள நாமக்கல் மாவட்டத்திலும் கணக்கெடுப்பு வேலைகள் நடந்துக்கிட்டிருக்குனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.