ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமியை விடுதலை செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் மறியல்

04:14 PM Oct 19, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சியில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் தமிழக அரசை கண்டித்தும் சட்டசபை மரபுகளை மீறிய சபாநாயகரை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து திருச்சியில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு திருச்சி மாநகர மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேலு தலைமையில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட உறுப்பினர் அரவிந்தன் மற்றும் நிர்வாகிகள் என பலர் தமிழக அரசை கண்டித்தும், கைது செய்யப்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT