Skip to main content

சசிகலா என சொன்னவுடன்.. ''எப்படியாவது நாங்க சண்டைப்போட்டுக்கு இருக்கணும்...'' சிரித்துக்கொண்டே சென்ற ஓ.பி.எஸ்.

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளராக முத்தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். திமுக வேட்பாளர் நா.புகழேந்தி போட்டியிட்டார். நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளராக நாராயணன் போட்டியிட்டார். இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். 


 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர், விக்கிரவாண்டியிலும், நாங்குநேரியிலும் அதிமுக வெற்றி பெறும் என்று சொல்லியிருந்தோம். அதன்படி இறுதிச்சுற்று முடிவில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். புதுச்சேரியை பொறுத்தவரையில் அந்த தொகுதி ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக, முதலமைச்சராக இருந்த வைத்திலிங்கம் வெற்றி பெற்ற தொகுதி. அவர்கள் தொகுதியை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். 

 

எங்களைப் பொறுத்தவரையில் ஒன்று திமுகவிடம் இருந்தது, இன்னொன்று காங்கிரசிடம் இருந்தது. அந்த இரண்டு தொகுதியிலும் மக்கள் செல்வாக்கு எங்களுக்குத்தான் இருக்கிறது என்பதை நாங்கள் நிரூபித்து காட்டி வெற்றிப் பெற்றிருக்கிறோம்.
 

உள்ளாட்சித் தேர்தல் வரும், வராது என்ற பேச்சு இருக்கிறது... உள்ளாட்சித் தேர்தல் வர வாய்ப்புகள் இருக்கிறதா?
 

வரும், வராதா என்ற சொல்லுக்கே இங்கே இடமில்லை. உறுதியாக டிசம்பரில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். 
 

ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர்தான் உள்ளாட்சித் தேர்தல் வர வாய்ப்புள்ளது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் சொல்லியிருந்தார்கள்..
 

ஏற்கனவே நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியில் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். அந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். 


 

sasikala-ops



டிடிவி தினகரன் உங்கள் அணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
 

ஏற்கனவே இதற்கு உரிய பதிலை நாங்கள் சொல்லிவிட்டோம். தலைமைக் கழகத்தினுடைய நிர்வாகிகள் ஒன்றுக்கூடி உண்மையான தொண்டர்களுடைய இசைவு ஆகியவைகளைப் பெற்றுத்தான் குடும்பம் சார்ந்த அந்த 16 பேர்களை நீக்கினோம். மீண்டும் அவர்களை சேர்க்க வேண்டும் என்ற கேள்வி எழவில்லை. எழுந்தால் அதை தீர்மானிக்கக்கூடிய மிகப்பெரிய சக்தியாக எங்களுடைய பொதுக்குழு இருக்கிறது. 
 

பொதுக்குழு கூடித்தான் அந்த 16 பேரை சேர்ப்பற்றி முடிவு செய்வீங்களா?
 

ஏற்கனவே பதிலை சொல்லிட்டேன். திரும்ப திரும்ப எப்படியாவது என்னுக்கிட்ட... 
 

16 பேருக்குள் சசிகலாவும் வருவார்களா? என்ற கேள்விக்கு, ''எப்படியாவது நாங்க சண்டைப்போட்டுக்கு இருக்கணும்...'' என சிரித்தப்படியே சென்றார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.