Skip to main content

சிரிச்சா பேசுற பதவிக்கு வேட்டு வைக்கிறேன்... நாங்களும் நட்பா இருப்போம்ல... அதிமுக, திமுகவின் புதிய ஸ்டைல்! 

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

ஆளும் கட்சியாக அ.தி.மு.க. இருந்தாலும் சரி, தி.மு.க. இருந்தாலும் சரி... இரு கட்சிகளின் வி.ஐ.பி.களுக்குள் ரகசிய டீலிங்குகள், பண பரிவர்த்தனைகள் நடந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் பொதுவெளிகளில் ஒருவருக்கொருவர் சந்திக்க நேர்ந்தால், தலை தெறிக்க ஓடுவார்கள். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, "அம்மா நம்ம அமைச்சர் ஒருத்தரும் தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருத்தரும் ரொம்ப நட்பா இருக்காங்க. நம்ம மா.செ.வும் தி.மு.க. மா.செ.வும் ஒரு கல்யாண வீட்ல சிரிச்சு சிரிச்சுப் பேசுனத என் கண்ணால பார்த்தேம்மா'’என போட்டுக் கொடுப்பதற்கென்றே ஒரு கோஷ்டி இருக்கும்.
 

admk



"சிரிச்சா பேசுறான் உடனே பதவிக்கு வேட்டு வைக்கிறேன்'’என தடாலடி காட்டுவார் ஜெ. ஆனால் இப்போது எடப்பாடி ஆட்சியில் அந்தளவுக்கு கெடுபிடி இல்லாதது இரு கட்சிகளின் வி.ஐ.பி.க்களுக்கு ரொம்பவே வசதியாக போய் விட்டது. அதற்கு லேட்டஸ்ட் உதாரண சம்பவங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் தி.மு.க., காங்கிரஸ் தலா 3 தொகுதிகளில் ஜெயித்து, ஆளும் கட்சிக்கு ஒன்றுமே கிடைக்காமல் போனதால் ரொம்பவே கடுப்பானார் ஜெ. அதனால் மக்கள் நலத்திட்டங்களுக்கு தி.மு.க., காங். எம்.எல்.ஏ.க்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் மல்லுக்கட்ட வேண்டியிருந்தது, போராட வேண்டியிருந்தது. ஆனால் இப்போதோ எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.
 

admk



கடந்த வாரம் ராஜாக்கமங்கலத்தில் மின்சார வாரியத்தின் சப்-டிவிஷன் திறப்பு விழா நாளில் தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜனுக்காக கலெக்டர் பிரசாந்த் வடநேரே காத்திருந்து, அவர் வந்த பின்தான் சப்-டிவிஷன் திறக்கப்பட்டது. அதேபோல் பூதபாண்டி கோவில் தேரோட்டத்தை தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டினும் அ.தி.மு.க. மா.செ. அசோகனும் சேர்ந்து வடம்பிடித்து துவக்கி வைத்தனர். இதற்கடுத்து நாகர்கோவில் மாநகராட்சியில் நடந்த வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் அ.தி.மு.க.வின் தளவாய்சுந்தரமும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாக கலந்துகொண்டதோடு கூட்டாக பேட்டி கொடுத்தனர்.

"நாங்களும் நட்பா இருப்போம்ல' என களத்தில் குதித்த காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாரும் மாவட்ட அதிகாரிகளுடனும் தளவாய்சுந்தரத்துடனும் நெருக்கம் காட்டிவருகிறார்.

இதையெல்லாம் பார்த்த ரஜினி மக்கள் மன்ற மா.து.செ. ஆர்.எஸ்.ராஜன் நம்மிடம் பேசும் போது, அவர்களுக்குள் கூட்டணி போட்டு, மக்கள் பிரச்சனைகளை மறந்துவிட்டார்கள் என்றார். இன்னும் ஒரு வருஷத்துல எலெக்ஷன் வரப்போகுது. இப்ப ஃப்ரண்டா இருந்து காரியம் சாதிச்சாதான் கட்சிக்காரனுக்கு செலவுபண்ண முடியும்'' என்கிறார் பத்மனாபபுரம் தி.மு.க. புள்ளி ஒருவர்.


அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரோ, “எதிர்க்கட்சிக் காரங்களை பகைச்சுக்கிட்டா அடிக்கடி போராட்டம் பண்ணி குடைச்சல் கொடுப்பாங்க. அது தேர்தல் சமயத்துல பாதிக்கும். அதுக்குத் தான் இப்படி'' என்கிறார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.