Skip to main content

கட்சி அலுவலகம் முற்றுகை - அதிமுகவினரிடையே சலசலப்பு

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

அதிமுக மா.செ.வை நீக்கியதால் சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மா.செவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

 

admk


 

திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை அப்பதவிக்கு நியமித்துள்ளனர். அதற்கு மாற்றாக உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்படுள்ளது.

இந்த நிலையில் அவ்வை சண்முகி சாலையில் இருந்து கோசத்துடன் கட்சி அலுவலகத்தை  நோக்கி முற்றுகையிட சென்ற அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களின் ஆதரவாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்த்துறைக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தேர்தல் வருகின்ற சூழலில் அதிமுக அலுவலகம் முற்றுகை என்பது அதிமுகவினர் மத்தியிலே பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்