தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பிஸியாக உள்ளனர். அதேபோல், வரும் நாட்களில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அகில இந்தியத் தலைவர்களும் தமிழகத்திற்கு வந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எழும்பூர் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில்,தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் அ.தி.மு.க.வின் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் புடைசூழ, தனது தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து 'இரட்டை இல்லை' சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.