Skip to main content

தேர்தல் தோல்வி எதிரொலி... எங்களுக்கு அமைச்சராகும் தகுதி இல்லையா... எடப்பாடியிடம் கொந்தளித்த அதிமுகவினர்!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

13 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட, பரப்பளவில் பெரிய மாவட்டமாக வேலூர் இருந்ததால், கிழக்கு -மேற்கு -மத்தி என கட்சியின் நிர்வாக மாவட்டங்களாகப் பிரித்துக் கொண்டது தி.மு.க. ஆனால் ஆளும்கட்சியான அ.தி.மு.க.விலோ கிழக்கு, மேற்கு என இரு மாவட்டங்கள்தான், இரண்டு மா.செ.க்கள்தான். சமீபத்தில் வேலூர் மாவட்டத்தை அரசு நிர்வாக வசதிக்காக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்றாகப் பிரித்தார் முதல்வர் எடப்பாடி.

 

admk



வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கே.வி. குப்பம், குடியாத்தம் என 5 சட்ட மன்றத் தொகுதிகள் வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம் பாடி, ஆம்பூர் என 4 சட்டமன்றத் தொகுதிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட் டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் என 4 சட்டமன்றத் தொகுதிகளும் வருகின்றன.

இப்படி மாவட்டங்களும் சட்டமன்றத் தொகுதிகளும் மூன்றாகப் பிரிக்கப்பட்ட பின்தான் அ.தி.மு.க.வில் மல்லுக் கட்டு ஆரம்பமாகி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்.சுக்கும் இணை ஒருங்கிணைப்பாளரான இ.பி.எஸ்.சுக் கும் மண்டையிடியும் ஆரம்பமாகியுள்ளது.

 

admk



"மூணாகப் பிரிச்சும் உங்க கட்சிக்குள் என்னதாங்க பிரச்சனை' என ராணிப்பேட்டை அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். 2002-லேயே கட்சி நிர்வாக வசதிக்காக வேலூரை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்தது கட்சித் தலைமை. அதுக்கப்புறம் வேலூர் மாநகரம் என பிரிக்கப்பட்டது. 2011-ல் எங்க அம்மா ஆட்சிக்கு வந்ததும், கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜானையும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த விஜய்யையும் மந்திரியாக்கினார்.


மந்திரியாக்கிய கொஞ்ச நாட்களிலேயே இருவரையும் அதிரடியாக நீக்கினார். 2012-ல் வீரமணியை மந்திரியாக்கினார். 2016-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சசிகலா புண்ணியத்தால் மந்திரியாகவே நீடித்தார் வீரமணி. இஸ்லாம் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காக வாணியம்பாடி எம். எல்.ஏ. நிலோபர் கபிலை மந்திரியாக்கினார் அம்மா. இரண்டு பேருமே பக்கத்து பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ.க்கள், மேற்கு மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள்.

சசிகலாவின் ஆசியுடன் கட்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட வீரமணி, வேலூர் மாநகர மாவட்டத்தை தன்னுடைய மேற்கு மாவட்டத்தில் இணைத்துக் கொண்டார். அப்போது ஆரம்பித்த வீரமணியின் ராஜ்ஜியம் இப்போதுவரை தொடர்வதால், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முடிவுடன் ராணிப் பேட்டை மாவட்டத்திற்கு மந்திரி பதவி கேட்க ஆரம்பிச் சுருக்கோம். இந்த மாவட் டத்தின் எம்.எல். ஏ.க்களான அரக் கோணம் ரவிக்கும் சோளிங்கர் சம்பத்திற்கு மந்திரியாகும் தகுதி இல்லையா என்ன?'' என ஏகத்திற்கும் கொந்தளித்தார். இவரின் கொந்தளிப்பு இப்படி என்றால், வேலூர் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரின் புலம்பலோ வேறு மாதிரியாக இருக்கிறது. “வேலூர் மேற்கு மா.செ.வாக அமைச்சர் வீரமணியும் கிழக்கு மா.செ. வாக அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவியும் இருக்கிறார்கள். இருவருக்கும் எப்போதும் ஒத்து வராது. அமைச்சர்கள் வீரமணியும் நிலோபர் கபிலும் திருப்பத்தூர் மாவட்டத்திற்குள் வருவதால், அந்த எல்லையைத் தாண்டி வரமாட்டார்கள். அதே போல ரவியும் ராணிப்பேட்டை மாவட் டத்தைத் தாண்டி, கட்சி வேலை பார்க்க மாட்டாரு.


அதனால இப்ப வேலூர் மாவட்ட கட்சி நிர்வாகிகள்தான் தத்தளிச்சிக்கிட்டிருக்கோம். சுருக்கமா சொல்லணும்னா இந்த மாவட்டத்திற்கு மந்திரியும் இல்ல, மா.செ. வும் இல்ல. வரப்போகும் மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்களில் ஜெயிக்கணும்னா ஒண்ணு வேலூர் மாவட்டத்திற்கு மந்திரி பதவி கொடுங்க, இல்ல மா.செ.வையாவது நியமிங்கன்னு ஓ.பி.எஸ். சிடமும் இ.பி.எஸ்.சிட மும் சொல்லிட்டோம். ஆனா அவர்கள் இரண்டு பேரும் தங்களது ஆட்களை நியமிப்பதில் மல்லுக்கட்டுகிறார்கள்.

"தனக்கு அடக்கமான ஆளுதான் மா.செ.வா வரணும், இல்லேன்னா மா.செ.வே வேண்டாம்'னு அமைச்சர் வீரமணி மல்லுக்கட்டுகிறார். இந்த மல்லுக் கட்டின் பின்னணியில் இருக்கும் சூட்சுமம் என்ன, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூருக்கு 800 கோடி ஒதுக்கப்பட்டு, வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு.

இதேபோல் 400 கோடி ஒதுக்கீட்டில் பொதுப்பணித்துறை வேலைகளும் நடந்துக்கிட்டிருக்கு. இதுக்கு மேல நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக்கங்க'' என்றார். கணக்குப் போட நினைத்தவர்கள் கச்சிதமாக கணக்கு போட்ட பிறகு நாம கணக்குப் போட்டு என்ன பண்றது?!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.