Skip to main content

கடுமையாக எதிர்க்கும் அதிமுக... சைலன்டாக இருக்கும் திமுக... பாஜக போடும் அதிரடி திட்டம்!

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

கடந்த ஒரு வாரமாக எந்தச் சேனலைத் திருப்பினாலும் 2021-ல் அதிசயம் நடக்கும், அற்புதம் நடக்கும் என்று  விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ரஜினியும், கமலும் மாற்றி மாற்றி இணைந்து செயல்படுவோம் என்று கூறிவருகின்றனர். அதன் அடிப்படையில் தான் 2021 தேர்தலில் அதிசயம் நடக்கும் என்று ரஜினி கூறிவருகிறார். ஆனால், இரண்டு பேரும் சேர்ந்து இன்னும் பேட்டி கொடுக்கவில்லை என்ற கேள்வியும் வருகிறது. இதற்கிடையிலே கமலின் மக்கள் நீதி மய்யத்தில் உள்ள நடிகை ஸ்ரீப்ரியா, முதல்வர் வேட்பாளர் கமல்தான் என்று சொல்ல, அது ஒரு பக்கம் விவாதத்தை ஏற்படுத்திவிட்டது. ரஜினிகிட்ட கட்சி ஆரம்பிக்கிறது பற்றிக் கேட்டாலும், இணைந்து செயல்படுவது பற்றிக் கேட்டாலும், முதல்வர் வேட்பாளர் பற்றிக் கேட்டாலும் திரும்பத் திரும்பச் சொல்வது தேர்தல் வரும்போது தெரியும் என்று தான். ஆனால், அதிசயம் நடக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார். 
 

rajini



ரஜினி-கமல் பற்றி அ,தி.மு.க.வில் முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை எல்லாரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், தி.மு.க. சைலன்ட்டா இருக்கு என்ற பேச்சும் அடிபடுகிறது. சமீபத்தில் துரைமுருகனிடம் இது பற்றி கேட்ட போது, இணைந்து வந்தால் நல்லதுதானேன்னு கூறியுள்ளார். மற்றபடி தி.மு.க. பெருசாக இந்த சம்பவம் தொடர்பாக ரியாக்ட் பண்ணவில்லை. அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ள நிலையில், பா.ஜ.க. தரப்பில் இருந்து தான் ரஜினி-கமல் இணைப்பு பற்றி கிளப்பிவிட்டு, தேர்தல் நேரத்தில் தி.மு.க.வுக்கு செல்லக்கூடிய வாக்குகளைப் பிரிக்க ப்ளான் பண்ணுறாங்கங்கிற என்ற சந்தேகம் இருக்கிறது என்கின்றனர். அதே நேரத்தில், ரஜினி, கமல் இருவர் மூவ்மெண்ட்டையும் டெல்லி உன்னிப்பாக கவனித்து வருவதாக சொல்கின்றனர். நெருக்கடிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அரசியல் சூழல்கள் எப்படி இருக்கு என்று தெரிந்து கொண்டு தான் சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும் இணைவார்கள் என்று கூறுகின்றனர். அதுவரைக்கும் வெயிட்டிங் தான் என்று  இருதரப்பிலும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.