Skip to main content

கடுமையாக எதிர்க்கும் அதிமுக... சைலன்டாக இருக்கும் திமுக... பாஜக போடும் அதிரடி திட்டம்!

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

கடந்த ஒரு வாரமாக எந்தச் சேனலைத் திருப்பினாலும் 2021-ல் அதிசயம் நடக்கும், அற்புதம் நடக்கும் என்று  விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ரஜினியும், கமலும் மாற்றி மாற்றி இணைந்து செயல்படுவோம் என்று கூறிவருகின்றனர். அதன் அடிப்படையில் தான் 2021 தேர்தலில் அதிசயம் நடக்கும் என்று ரஜினி கூறிவருகிறார். ஆனால், இரண்டு பேரும் சேர்ந்து இன்னும் பேட்டி கொடுக்கவில்லை என்ற கேள்வியும் வருகிறது. இதற்கிடையிலே கமலின் மக்கள் நீதி மய்யத்தில் உள்ள நடிகை ஸ்ரீப்ரியா, முதல்வர் வேட்பாளர் கமல்தான் என்று சொல்ல, அது ஒரு பக்கம் விவாதத்தை ஏற்படுத்திவிட்டது. ரஜினிகிட்ட கட்சி ஆரம்பிக்கிறது பற்றிக் கேட்டாலும், இணைந்து செயல்படுவது பற்றிக் கேட்டாலும், முதல்வர் வேட்பாளர் பற்றிக் கேட்டாலும் திரும்பத் திரும்பச் சொல்வது தேர்தல் வரும்போது தெரியும் என்று தான். ஆனால், அதிசயம் நடக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார். 
 

rajini



ரஜினி-கமல் பற்றி அ,தி.மு.க.வில் முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை எல்லாரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், தி.மு.க. சைலன்ட்டா இருக்கு என்ற பேச்சும் அடிபடுகிறது. சமீபத்தில் துரைமுருகனிடம் இது பற்றி கேட்ட போது, இணைந்து வந்தால் நல்லதுதானேன்னு கூறியுள்ளார். மற்றபடி தி.மு.க. பெருசாக இந்த சம்பவம் தொடர்பாக ரியாக்ட் பண்ணவில்லை. அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ள நிலையில், பா.ஜ.க. தரப்பில் இருந்து தான் ரஜினி-கமல் இணைப்பு பற்றி கிளப்பிவிட்டு, தேர்தல் நேரத்தில் தி.மு.க.வுக்கு செல்லக்கூடிய வாக்குகளைப் பிரிக்க ப்ளான் பண்ணுறாங்கங்கிற என்ற சந்தேகம் இருக்கிறது என்கின்றனர். அதே நேரத்தில், ரஜினி, கமல் இருவர் மூவ்மெண்ட்டையும் டெல்லி உன்னிப்பாக கவனித்து வருவதாக சொல்கின்றனர். நெருக்கடிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அரசியல் சூழல்கள் எப்படி இருக்கு என்று தெரிந்து கொண்டு தான் சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும் இணைவார்கள் என்று கூறுகின்றனர். அதுவரைக்கும் வெயிட்டிங் தான் என்று  இருதரப்பிலும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.