Skip to main content

அதிமுக அலுவலகத்தில் கலவரம் (படங்கள்) 

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 


அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை அடுத்த வானகரத்தில் நடந்தது. இதில், தற்காலிக பொதுச் செயலாளராக இ.பி.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக ஒ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் பூட்டை உடைத்து நுழைந்தார். அதன்பின் அங்கு இ.பி.எஸ்-ன் ஆதரவாளர்களும் வந்தனர். அதனைத் தொடர்ந்து ஒ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மத்தியில் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. மேலும், அதிமுக அலுவலகத்திற்குள் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி, இ.பி.எஸ் புகைப்படங்களை கீழே போட்டு உடைத்தனர். 

 

சார்ந்த செய்திகள்