அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இபிஎஸ் வசம் சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இ.பி.எஸ். வீட்டின் முன்பு குவிந்து இனிப்புகள் கொடுத்தும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.அதேபோல், அதிமுக தலைமை அலுவலகத்தின் வெளியிலும் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இனிப்புகள் கொடுத்து கொண்டாடினர்.
‘ஸ்வீட் எடு கொண்டாடு’ இ.பி.எஸ். ஆதரவாளர்கள் கொண்டாட்டம்! (படங்கள்)
Advertisment