சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு (படங்கள்)

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் இன்று (22.06.2024) தொடங்கியது. சட்டப்பேரவையில், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் 2 வது நாளாக இன்றும் அ.தி.மு.கவினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும், கேள்வி நேரத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர். அதற்கு அனுமதி கிடைக்காததால், தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

admk kallakurichi Legislative Assembly Tamilnadu assembly
இதையும் படியுங்கள்
Subscribe