Skip to main content

அமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வராக்குங்க... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் எடப்பாடி!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போட்ட ஊரடங்கு காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முடக்கப்பட்டிருப்பதும், துறை செயலாளரான பீலா ராஜேஷுக்கு அதிமுக்கியத்துவம் தரப்பட்டிருப்பதும்தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.  ஒவ்வொரு நாளும் கரோனா நிலவரம் அறிவித்து வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் இப்போது, ஏதாவது ஒரு மருத்துவமனையை ஆய்வு செய்வதுதான் ஊடகங்களில் வருகிறது. பெரும்பாலும் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையிலேயே இருக்கிறார் என்று சொல்கின்றனர். 

 

admk


 

இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, கரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான பர்சண்டேஜ் பிரச்சினையில்தான், முதல்வர் எடப்பாடிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையில் முதலில் உரசல் தீப்பொறி ஏற்பட்டது என்கின்றனர். இந்த நிலையில் கரோனா தடுப்புப்பணியில், விஜயபாஸ்கர் பம்பரமாகச் செயல்படுகிறார், அவரை ஏகத்துக்கும் பாராட்டி விளம்பர மீம்ஸ்கள் வெளியானதில் எடப்பாடி உள்பட சீனியர் அமைச்சர்கள் பலருக்கும் எரிச்சல். அதையடுத்துதான், அமைச்சர் ஓரங்கட்டப்பட்டு, சுகாதாரத்துறை செயலாளர் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்.

மேலும் விஜயபாஸ்கரை பொறுத்தவரை 25 எம்.ஏல்.ஏ.க்கள் சப்போர்ட்டாக இருக்கிறார்கள். அவங்களுக்கு மாதா மாதம் எனர்ஜி டானிக் கிடைத்துவிடுவதால், விஜயபாஸ்கர் கிழித்த கோட்டை அவர்கள்  தாண்டமாட்டாங்க என்று சொல்கின்றனர். அந்த தைரியத்தில்தான், தற்போதும் ஆய்வுப் பணிகளில் ஜரூராக இருக்கிறார் என்கின்றனர். கரோனாவுக்காக அவசரமாகப் பணி நியமனம் செய்யப்பட்ட ஏறத்தாழ ஆயிரம் லேப் டெக்னீஷியன்களும், எங்களைச் சொந்த ஊர்களில் அப்பாயின்மெண்ட் போடுங்கள் என்று, விஜயபாஸ்கர் தரப்பை வெயிட்டாவே துரத்திக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.



 

 

admk


 

http://onelink.to/nknapp


அதோடு எடப்பாடி அரசால் ஓரங்கப்பட்டதாக அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டாலும், விஜயபாஸ்கருக்கு ஆதரவான பிரச்சாரங்களும் போஸ்டர்களும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களிலும் ’முதல்வர் பழனிசாமியே, பாஜகவுக்கு நன்றி விசுவாசம் செய்யும் நேரமா இது? கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பொறுப்பை மீண்டும் விஜய பாஸ்கருக்கு வழங்கிடு! பா.ஜ.க பொன்.ராதா கிருஷ்ணனின் உறவினரான பீலாவை டிஸ்மிஸ் செய்யின்னு’ போஸ்டர்களை வெளியிட ஆரம்பித்து விட்டார்கள்.உச்சகட்டமாக விஜயபாஸ்கரை முதல்வராக்குன்னும் அதிரடி கிளப்பியுள்ளார்கள். இது எடப்பாடித் தரப்புக்கு ஹை வோல்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், இந்தப் போஸ்டர்களின் பின்னணியில் இருப்பது யாருன்னு உளவுத் துறையை அவர் விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்.'

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.