Skip to main content

முதல்வர் பதவிக்கு டெல்லியில் பேரம்... அமைச்சரால் உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி! 

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

தமிழகம் முழுவதும் எடப்பாடிக்கு நெருக்கமான தரப்பு தான் மணல் குவாரி பிஸ்னஸை, லீகலாவும் இல்லீகலாவும் நடத்திக்கிட்டு இருப்பதாக கூறுகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டையில் பாறைகளில் இருந்து மணலைத் தயாரிக்கும் ’எம் சாண்ட் ’தொழிற்சாலையைத் தொடங்கியிருக்கார் அமைச்சர் விஜயபாஸ்கர். தங்களின் தயாரிப்புக்கு டிமாண்ட்டை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. உதாரணமாக அங்கிருக்கும் எஸ்.பி.அசோக் மூலம், ஆற்று மணலை எடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுவும் எடப்பாடி கவனத்துக்குப் போனதால், விரைவில் எஸ்.பி.க்கு டிரான்ஸ்பர் உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்ற செய்தியும் வெளிவருகிறது. 

 

admk

இப்படி பிஸ்னஸ் ரீதியாவும் தனக்கு நெருக்கடி கொடுத்த விஜயபாஸ்கர், டெல்லியின் ஆதரவை தக்க வைத்து கொள்ள எடப்பாடி கையாளும் டெக்னிக்கை அறிந்து, அதே பாணியில் அவரும் செயல்பட்டு  வருவதை பார்த்து எடப்பாடி அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த டெக்னீக் பற்றி விசாரித்த போது, பா.ஜ.க.வைப் பொறுத்தவரை இந்தியா முழுவதும் தாமரையை மலர வைக்க, அமித்ஷா மேற்பார்வையில் நிதி மேலாண்மையில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இதையெல்லாம் புரிந்து கொண்டு தான், தன் ஆட்சியைத் தக்க வைக்க முதல்வர் எடப்பாடி தனக்கு நம்பிக்கையான அமைச்சர்கள் மூலம் டெல்லிக்கு வேண்டியதை செய்து வருகிறார் என்று சொல்கின்றனர். சசிகலா தரப்பும், விரைவில் விடுதலையாவதற்காக டெல்லியுடன் இந்த ரூட்டில் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர். 


 

 

admk



இந்த ஸ்பெஷல் ரூட்டை அறிந்த விஜய பாஸ்கர், அமித்ஷா மகனான ஜெய்ஷாவிடம், தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு , எம்.எல். ஏ.க்களின் ஆதரவு எனக்கும் இருக்கிறது. அதனால் என்னை முதல்வர் நாற்காலியில் அமர வையுங்கள் என்று கூறிவருவதாக சொல்லப்படுகிறது. அதற்காக நீங்கள் கேட்பதை செய்து தர தயார் என்று தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விபரமெல்லாம் எடப்பாடியின் கவனத்துக்கு உரியவர்கள் மூலம் வந்து சேர, ஹைவோல்ட் அதிர்ச்சிக்கு ஆளான அவர், விஜயபாஸ்கருக்காகத் திறக்கப்பட்ட டெல்லிக் கதவுகளை மூடும் முயற்சிகளில் மும்முரமாக  இறங்கியுள்ளார். மேலும் விரைவில் அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை மாற்றலாம் என்ற   தீர்மானத்திற்கும் எடப்பாடி வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

 

IIT


 

சார்ந்த செய்திகள்

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.