Skip to main content

"இது கொள்ளையடித்த பணமென்றால், விவசாயிகளுக்கு 6,000 கொடுப்பது..?" - அண்ணாமலைக்கு அமைச்சர் சண்முகம் பதிலடி!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

ADMK Minister cv shanmugam press meet at viluppuram

 

நேற்று விழுப்புரத்தில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பத்திரிகையாளர்களைச் சந்திதார், அப்போது அமைச்சர் சண்முகம் பேசும்போது, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் மீது 98 பக்க ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்துள்ளார். இது புதிதாகச் சொல்லப்பட்ட புகார் அல்ல. அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே இது போன்ற குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு வருகின்றன. 
 

பாஜக அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு, கொள்ளையடித்த பணத்தை பொங்கல் பண்டிகைக்கு அ.தி.மு.க. கொடுக்கிறது என்றால், விவசாயிகளுக்கு ரூபாய் 6,000 மத்திய அரசு வழங்குகிறதே அது எதிலிருந்து கொடுக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் சண்முகம், குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் கலந்துகொண்டவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. 

 

மேலும் அது சம்பந்தமான பணிகள் எதுவும் இன்னும் துவங்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில், அதில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறுவது வேடிக்கையாகஉள்ளது. பாரத் நெட்டில் 1,950 கோடி ஊழல் என்கிறார்கள். நடக்காத டெண்டரில் எப்படி ஊழல் செய்ய முடியும்? அது குளோபல் டெண்டர் அதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. எதையாவது சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். பொதுமக்கள் ஏமாற மாட்டார்கள்” இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார். 

 

மேலும், கடந்த 2007ஆம் ஆண்டு ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, அவரது மகன் உதயநிதி அரசின் அனுமதிபெறாமல் சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுக் காரை இறக்குமதி செய்து வரிஏய்ப்பு செய்தார். இதனால் அப்போதைய மன்மோகன் சிங் அரசு அந்த காரை பறிமுதல் செய்ததா? இல்லையா? ஸ்டாலின் மருமகன் சபரீசன் காலாவதியான மருந்துகளை கோடிக்கணக்கில் விற்றவர். தி.மு.க. எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது சிறப்பு நீதிமன்றத்தில் 368 வழக்குகள் உள்ளன. 


ஊழல் எனும் பெயரை இந்தியாவில் அறிமுகம் செய்ததே கலைஞர்தான். தி.மு.க. கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால், நேரடியாக வழக்கு தொடுங்கள். அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். தி.மு.க.விற்கு மக்கள் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையில்லை. தேர்தலை மனதில் கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளைப் புதிதாகக் கொடுத்துள்ளனர் ஸ்டாலினுடைய வாழ்க்கையே பினாமி வாழ்க்கைதான் விவசாயிகளைப் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு அருகதை கிடையாது பாஜக ஆட்சிக்கு யாரும் இங்கு அடிபணியவில்லை. இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.