Skip to main content

அதிமுக உட்கட்சி பூசலால் அடுத்தது என்ன நடக்கும்!

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாகி விட்டது என்கின்றனர் அரசியல் வட்டாரங்கள்.இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த கூட்டத்திற்கு முன்பு அதிமுக அலுவலகம் முன்பு இருக்கும் சுவரில் எடப்பாடி பழனிச்சாமி தான் அடுத்து பொது செயலாளராக வர வேண்டும் என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டு இருந்தன.மேலும் சிவகங்கை பகுதியில் அமைச்சர் செங்கோட்டையன் தான் அடுத்த பொது செயலாளராக வர வேண்டும் என்று போஸ்டர் அடித்துள்ளனர்.

 

admk



இன்னும் ஒரு சிலர் பன்னீர்செல்வம் தான் கட்சி தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.இந்த நிலையில் தமிழக ஆளுநர் இரண்டு நாட்களுக்கு முன்பு அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது.அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலை தமிழ்நாட்டில் மட்டுமின்றி மத்தியில் ஆளும் பாஜகவும் உற்று நோக்கி கவனித்து வருகிறது.இன்னும் சிலர் அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலுக்கு பாஜக தான் காரணம் என்றும் கூறிவருகின்றனர்.இதனால் ஆட்சி முடியும் வரை அதிமுகவில் தற்போது நிலையை இருக்கும் என்றும்,அதன் பின்பு உட்கட்சி பூசலால் ஓபிஎஸ், இபிஎஸ் அணி என்று பிரிய வாய்ப்பு உள்ளதாக கூறிவருகின்றனர். 

  sasikala



மேலும் சசிகலா விடுதலை அடைந்து வரும் போது அதிமுக தலைமையில் மாற்றங்கள் வரும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி அரசியலுக்கு வந்தால் ஓபிஎஸ் அதிமுகவில் பிரிந்து மீண்டும் ஓபிஎஸ் அணி வரக்கூடும்,பின்பு ரஜினி,ஓபிஎஸ் அணி,பாஜக கூட்டணி அமையக் கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.