Skip to main content

ஓட்டுப்போட வாங்கிய பணத்தைத் திருப்பிக் கேட்டு வாங்கிய அதிமுக நிர்வாகிகள்!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

ADMK executives who demanded a refund for the money they bought to drive!

 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. சுயேச்சை மற்றும் சொந்த கட்சி கவுன்சிலர்களை தன்பக்கம் இழுத்து அதிமுக ஒன்றிய செயலாளர் யாகப்பன், ரெஜினா நாயகத்தை தலைவராக்கி, தான் துணைத் தலைவராகி ஆக்டிங் சேர்மனாக அமர்ந்து கொண்டார்.

 

தற்போது ஆட்சி மாறி, காட்சிகள் மாறத் தொடங்கி உள்ளது. அப்போதே தனது மனைவி லலிதாவைத் தலைவராக்க முயற்சி செய்த திமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோரின் கண்ணசைவில் காய்களை நகர்த்த தொடங்கியுள்ளார். 

 

முதல் கட்டமாக ஒரு சுயேச்சை மற்றும் பாமக ஒன்றிய கவுன்சிலர்கள் திமுகவில் இணைக்கப்பட்டனர். 3 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவிற்கு ஆதரவளித்தனர். இதனால் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் சாதாரண கூட்டம்கூட போதிய கவுன்சிலர்கள் பங்கேற்காததால் ஒத்திவைக்கப்பட்டது. திமுகவோடு சேர்ந்து அதிமுக கவுன்சிலர்களின் கூட்டத்தைப் புறக்கணித்ததால் ஒரு தீர்மானம்கூட அதிமுக தலைவரால் நிறைவேற்ற முடியவில்லை. 

 

தன்னிடம் காசு வாங்கிக்கொண்டு ஆதரவு தெரிவித்துவிட்டு தற்போது அணி மாறி இருக்கும் ஒன்றிய கவுன்சிலர்கள் மீது ஏக கடுப்பில் இருக்கும் அதிமுகவினர், அணி மாறிய ஒரு கவுன்சிலர் வீட்டுக்கு 30க்கும் மேற்பட்டோர் சென்று “காசு வாங்கிக் கொண்டு இப்படிச் செய்யலாமா” என வார்த்தைகளைக் கொட்ட, கடுப்பான அந்த கவுன்சிலர் கொடுத்த பணத்தை வந்தவர்களிடம் தந்துள்ளார். இதே பாணியில் மற்றொரு கவுன்சிலருக்கும் குடைச்சல் கொடுத்து உள்ளது அந்த அதிமுக குரூப். அந்த பெண்  கவுன்சிலரின் கணவரோ, “இரண்டு வருடம் நான் கொடுத்த ஆதரவில் சம்பாதித்த பணத்தில் பங்கு கொடுங்கள். நீங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பி கொடுத்து விடுகிறேன்” என ஒரே போடாக போட்டுவிட அந்த அதிமுக குரூப் பின் வாங்கியுள்ளது. 

 

தற்போது ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் 19 பேரில் 11 பேர் திமுக வசம் உள்ள நிலையில், மேலும் மூன்று கவுன்சிலர்கள் அணி மாற தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் முதன் முறையாக அதிமுக ஒன்றியக் குழு தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து  யூனியன் சேர்மன் பதவியை திமுக கைப்பற்றும் அரசியல் ஆட்டம் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமியால் நிலக்கோட்டையில் தொடங்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.