Skip to main content

"சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும்" - கொங்கு மண்டலத்தில் ஒலித்த குரல் 

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

aarukutty

 

சசிகலாவை அதிமுகவில் இணைக்கவேண்டும் என கோவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி வலியுறுத்தியுள்ளார்.

 

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் நேற்று தன்னுடைய பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்  நடத்தினார். மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அடைந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்கவேண்டும் என்று சில நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. இத்தகவல் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி அதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  

 

கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆறுகுட்டி, அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமைதான் தேவை என்றும் அனைவரும் ஒன்றிணைந்தால் எதிர்காலத்தில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்