Advertisment

''எவ்வளவு செஞ்சிருக்கீங்க...? திமுக ஆட்சியில் கொலைதான் அதிகரித்துள்ளது'' - இபிஎஸ் பேட்டி!  

admk EPS interview!

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகதேர்தல் நடைபெற இருக்கிறது.நேற்று முன்தினம் (23.09.2021) திருப்பத்தூரில் தனியார் நட்சத்திரஹோட்டலில், திருப்பத்தூர் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதேபோல் நேற்று நெல்லையில்அதிமுகநிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''திமுக 505 தேர்தல் அறிவிப்புகளைவெளியிட்டதோடு இதுவும் போதாதுன்னு மேலும் 20 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். மொத்தமாக 525 தேர்தல் வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். எவ்வளவு செஞ்சிருக்கீங்க. நான்கு மாதம் முடிந்து ஐந்தாவது மாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரண்டோ... மூன்றோ... அறிவிப்புகளை சம்பிரதாயத்திற்கு அறிவித்துவிட்டு விட்டுட்டாங்க. ஆனால் அறிவிக்கப்பட்ட எந்த அறிவிப்புமே நிறைவேற்றப்படவில்லை'' என்றார்.

dmk

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில்தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் அதில்,“திமுக அளித்த 505 வாக்குறுதிகளில்222 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 மாதமே ஆன நிலையில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் சொன்னது மட்டுமின்றி சொல்லாததையும் செய்துகொடுத்துள்ளது திமுக அரசு'' என தெரிவித்திருந்தார்.

admk

இந்நிலையில் தற்போது காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ''ஊரக உள்ளாட்சித்தேர்தலில் ஏதாவது காரணம் காட்டிஅதிமுக வேட்பாளர்களின்வேட்புமனுக்கள்நிராகரிக்கப்படுகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போய் உள்ளது. கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிமுகஅரசு கொண்டுவந்தஅனைத்து திட்டங்களையும் திமுக அரசு முடக்குகிறது'' என்றார்.

Advertisment
admk edappadi pazhaniswamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe