Skip to main content

விதிகளை மீறி குளறுபடி செய்த அதிமுக... மேயர் தேர்தலை தடுக்க திட்டம்... எடப்பாடிக்கு செக் வைக்கும் திமுக!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

தேர்தலை நடத்தவிடாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அ.தி.மு.க. அரசு செய்தது. பஞ்சாயத்து ராஜ் விதிகளை மீறி குளறுபடிகளோடு தேர்தல் அறிவிப்பை அ.தி.மு.க. அரசு வெளியிடுவதும், அதை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் செல்வதுமாக உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகிக் கொண்டே இருந்தது.

முறைப்படி தேர்தல் நடத்தக்கோரி திமுக நீதிமன்றம் சென்றாலும், தி.மு.க.வால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை என்று அ.தி.மு.க. கூறிவந்தது. தி.மு.க.வின் நீதிமன்ற நடவடிக்கைகளால் வார்டு வரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

 

politics



பெரும்பாலும் இங்கு உள்ளூர் செல்வாக்கு, சாதி பலம், பணபலம் போன்றவைதான் வெற்றியைத் தீர்மானிக்கும். எனவே, பணத்தை வாரியிறைத்து உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு வெற்றியை உறுதி செய்துவிட்டால் 2021 சட்டமன்றத் தேர்தலை சமாளிக்கலாம் என்று அ.தி.மு.க. திட்டமிட்டது.

தி.மு.க.வுடன் பல மாவட்டங்களில் இணக்கமான உடன்படிக்கை என்றும், அ.தி.மு.க.வுக்கு எதிராக வீக்கான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் செய்திகளை கசியவிட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்கே உரிய கூட்டணி குணாம்சங்களும் வெளிப்படத்தான் செய்தன. அ.தி.மு.க. கூட்டணியில் மட்டுமின்றி, தி.மு.க. கூட்டணியிலும் இந்த புகைச்சல் இருந்தது.

 

admk



ஆனால், இதையெல்லாம் மீறி தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு ஓரளவுக்கு தெம்பூட்டுவதாகவே அமைந்தன. மாவட்ட ஊராட்சிகளிலும், ஒன்றிய ஊராட்சிகளிலும் அ.தி.மு.க.வின் எதிர்பார்ப்பை தகர்த்து தி.மு.க. வேட்பாளர்கள் பல மாவட்டங்களில் வெற்றிபெற்றனர். அ.தி.மு.க.வின் கோட்டை எனப்பட்ட ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் தி.மு.க. முன்னேறியது. எடப்பாடிக்கு செல்வாக்கான பகுதி என்று கருதப்பட்ட கொங்கு மண்டலத்தில்கூட தி.மு.க. குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை பெற்றது.


அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ்.மணியன், பாஸ்கரன், ராஜேந்திரபாலாஜி, கருப்பணன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரின் அதிகார பலத்தையும் மீறி அவர்களின் ஏரியாக்களில் தி.மு.க. அணி வெற்றியை பதிவு செய்தது. கிராமப்புறங்களில் எளிதாக பணம் கொடுத்து வெற்றிபெறலாம் என்ற அ.தி.மு.க.வின் கனவு தகர்க்கப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.


இந்நிலையில்தான், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக தேர்தல் அதிகாரியை திடீரென்று சந்தித்தார். தி.மு.க. வெற்றி பெற்ற பல இடங்களின் முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்தியிருப்பதாக பகீர் புகாரை தெரிவித்தார். குறிப்பாக, எடப்பாடி பழனிச் சாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியிலேயே தி.மு.க. வெற்றிபெற்றிருப்பதையும் அதை அறிவிக்கவிடாமல் அவருடைய மைத்துனர் வெங்கடேசன் தடுப்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. தரப்பில் நீதிமன்றத்திலும் முறையீடு செய்யப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருக்கும் இடங்களில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள். ஆளுங்கட்சியின் அராஜகம் தொடர்ந்தால் தேர்தல் ஆணையம் முன்பே மறியல் செய்யவும் யோசிப்பதாக ஸ்டாலின் எச்சரித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு 60 சதவீதம் வெற்றி கிடைத்தால் போதும் என்று அறிவாலயம் கணக்கிட்டிருந்தது. அந்தக் கணக்குக்கு நெருக்கமாக ஆளுங்கட்சியின் அதிகாரபலம், பணபலத்தைத் தாண்டி கிடைத்த முன்னிலை நிலவரங்கள் தொண்டர்களுக்கு தெம்பூட்டின.

ஆனால், தி.மு.க. வெற்றிபெற்றதை அறிவிக்கவிடாமல் இழுபறி என்ற தோற்றத்தை உருவாக்க அ.தி.மு.க. முயற்சிப்பது அம்பலமானதும் தி.மு.க.வினர் வேகம் காட்டினர். ஆளுந்தரப்பின் முறைகேடுகளை சட்டரீதியாக தடுத்துநிறுத்தும் முயற்சிகளை தி.மு.க. வழக்கறிஞர் அணி முன்னெடுத்தது. அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகள் எண்ணும் மையத்தின் முன் 50 வழக்கறிஞர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும், நள்ளிரவு ஆனாலும் நிறுத்தப்பட்ட தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி அறிவிப்பை வெளியிடும் வரை விட மாட்டார்கள் என்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்தார்.

மாவட்ட ஊராட்சித் தேர்தலில் பல மாவட்டங்களை தி.மு.க. வசப்படுத்தும் நிலை ஏற்பட்டிருப்பது முதல்வர் எடப்பாடியை அதிர்ச்சியடையச் செய்தது, அதிலும் அவர் வாக்களித்த வார்டிலேயே தி.மு.க. முன்னிலை பெற்றிருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதுபோலவே, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்தத் தொகுதியான போடியிலும் தி.மு.க. வெற்றிபெற்றதை அறிவிக்கவிடாமல் தடுப்பதாக புகார் எழுந்தது.

முடிந்தவரை, எதிர்த்தரப்பின் வெற்றியைத் தடுப்பதற்கான வியூகங்கள் வகுப்பது, அதன் அடுத்த கட்டமாக, மாவட்ட கவுன்சில் -ஒன்றிய கவுன்சில் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் ஜெயிப்பதற்கேற்ப கவுன்சிலர்களிடம் பர்சேஸ் பாலிசியை கடைப்பிடிப்பது என்பதுதான் ஆளுந்தரப்பின் இறுதி வியூகம். ஊரகத் தேர்தலின் ரிசல்ட்டால் நகராட்சி மற்றும் மேயர் தேர்தல்கள் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.