Skip to main content

விதிகளை மீறி குளறுபடி செய்த அதிமுக... மேயர் தேர்தலை தடுக்க திட்டம்... எடப்பாடிக்கு செக் வைக்கும் திமுக!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

தேர்தலை நடத்தவிடாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அ.தி.மு.க. அரசு செய்தது. பஞ்சாயத்து ராஜ் விதிகளை மீறி குளறுபடிகளோடு தேர்தல் அறிவிப்பை அ.தி.மு.க. அரசு வெளியிடுவதும், அதை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் செல்வதுமாக உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகிக் கொண்டே இருந்தது.

முறைப்படி தேர்தல் நடத்தக்கோரி திமுக நீதிமன்றம் சென்றாலும், தி.மு.க.வால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை என்று அ.தி.மு.க. கூறிவந்தது. தி.மு.க.வின் நீதிமன்ற நடவடிக்கைகளால் வார்டு வரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

 

politics



பெரும்பாலும் இங்கு உள்ளூர் செல்வாக்கு, சாதி பலம், பணபலம் போன்றவைதான் வெற்றியைத் தீர்மானிக்கும். எனவே, பணத்தை வாரியிறைத்து உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு வெற்றியை உறுதி செய்துவிட்டால் 2021 சட்டமன்றத் தேர்தலை சமாளிக்கலாம் என்று அ.தி.மு.க. திட்டமிட்டது.

தி.மு.க.வுடன் பல மாவட்டங்களில் இணக்கமான உடன்படிக்கை என்றும், அ.தி.மு.க.வுக்கு எதிராக வீக்கான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் செய்திகளை கசியவிட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்கே உரிய கூட்டணி குணாம்சங்களும் வெளிப்படத்தான் செய்தன. அ.தி.மு.க. கூட்டணியில் மட்டுமின்றி, தி.மு.க. கூட்டணியிலும் இந்த புகைச்சல் இருந்தது.

 

admk



ஆனால், இதையெல்லாம் மீறி தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு ஓரளவுக்கு தெம்பூட்டுவதாகவே அமைந்தன. மாவட்ட ஊராட்சிகளிலும், ஒன்றிய ஊராட்சிகளிலும் அ.தி.மு.க.வின் எதிர்பார்ப்பை தகர்த்து தி.மு.க. வேட்பாளர்கள் பல மாவட்டங்களில் வெற்றிபெற்றனர். அ.தி.மு.க.வின் கோட்டை எனப்பட்ட ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் தி.மு.க. முன்னேறியது. எடப்பாடிக்கு செல்வாக்கான பகுதி என்று கருதப்பட்ட கொங்கு மண்டலத்தில்கூட தி.மு.க. குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை பெற்றது.


அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ்.மணியன், பாஸ்கரன், ராஜேந்திரபாலாஜி, கருப்பணன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரின் அதிகார பலத்தையும் மீறி அவர்களின் ஏரியாக்களில் தி.மு.க. அணி வெற்றியை பதிவு செய்தது. கிராமப்புறங்களில் எளிதாக பணம் கொடுத்து வெற்றிபெறலாம் என்ற அ.தி.மு.க.வின் கனவு தகர்க்கப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.


இந்நிலையில்தான், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக தேர்தல் அதிகாரியை திடீரென்று சந்தித்தார். தி.மு.க. வெற்றி பெற்ற பல இடங்களின் முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்தியிருப்பதாக பகீர் புகாரை தெரிவித்தார். குறிப்பாக, எடப்பாடி பழனிச் சாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியிலேயே தி.மு.க. வெற்றிபெற்றிருப்பதையும் அதை அறிவிக்கவிடாமல் அவருடைய மைத்துனர் வெங்கடேசன் தடுப்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. தரப்பில் நீதிமன்றத்திலும் முறையீடு செய்யப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருக்கும் இடங்களில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள். ஆளுங்கட்சியின் அராஜகம் தொடர்ந்தால் தேர்தல் ஆணையம் முன்பே மறியல் செய்யவும் யோசிப்பதாக ஸ்டாலின் எச்சரித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு 60 சதவீதம் வெற்றி கிடைத்தால் போதும் என்று அறிவாலயம் கணக்கிட்டிருந்தது. அந்தக் கணக்குக்கு நெருக்கமாக ஆளுங்கட்சியின் அதிகாரபலம், பணபலத்தைத் தாண்டி கிடைத்த முன்னிலை நிலவரங்கள் தொண்டர்களுக்கு தெம்பூட்டின.

ஆனால், தி.மு.க. வெற்றிபெற்றதை அறிவிக்கவிடாமல் இழுபறி என்ற தோற்றத்தை உருவாக்க அ.தி.மு.க. முயற்சிப்பது அம்பலமானதும் தி.மு.க.வினர் வேகம் காட்டினர். ஆளுந்தரப்பின் முறைகேடுகளை சட்டரீதியாக தடுத்துநிறுத்தும் முயற்சிகளை தி.மு.க. வழக்கறிஞர் அணி முன்னெடுத்தது. அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகள் எண்ணும் மையத்தின் முன் 50 வழக்கறிஞர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும், நள்ளிரவு ஆனாலும் நிறுத்தப்பட்ட தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி அறிவிப்பை வெளியிடும் வரை விட மாட்டார்கள் என்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்தார்.

மாவட்ட ஊராட்சித் தேர்தலில் பல மாவட்டங்களை தி.மு.க. வசப்படுத்தும் நிலை ஏற்பட்டிருப்பது முதல்வர் எடப்பாடியை அதிர்ச்சியடையச் செய்தது, அதிலும் அவர் வாக்களித்த வார்டிலேயே தி.மு.க. முன்னிலை பெற்றிருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதுபோலவே, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்தத் தொகுதியான போடியிலும் தி.மு.க. வெற்றிபெற்றதை அறிவிக்கவிடாமல் தடுப்பதாக புகார் எழுந்தது.

முடிந்தவரை, எதிர்த்தரப்பின் வெற்றியைத் தடுப்பதற்கான வியூகங்கள் வகுப்பது, அதன் அடுத்த கட்டமாக, மாவட்ட கவுன்சில் -ஒன்றிய கவுன்சில் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் ஜெயிப்பதற்கேற்ப கவுன்சிலர்களிடம் பர்சேஸ் பாலிசியை கடைப்பிடிப்பது என்பதுதான் ஆளுந்தரப்பின் இறுதி வியூகம். ஊரகத் தேர்தலின் ரிசல்ட்டால் நகராட்சி மற்றும் மேயர் தேர்தல்கள் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.