Skip to main content

"சார் அசிங்கப் படுத்தீட்டாங்க" -ஓ.பி.எஸ். தரப்பு குமுறல்!

Published on 16/08/2020 | Edited on 16/08/2020
o panneerselvam - edappadi palanisamy

                              சுதந்திர தின விழாவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

 

தமிழக அரசியலில் ஆளும் கட்சியான அதிமுகவில் யார் தொடர்ந்து பதவியில் இருந்து வருவது என்கின்ற பதவிப் போட்டி தொடங்கிவிட்டது அதில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியா? அல்லது தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒ.பன்னீர்செல்வமா? என்கிற பதவிப் போட்டி கடந்த இரு வாரமாக நடந்து வருகிறது.

 

இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வீட்டிலும் சீனியர் அமைச்சர்கள் பஞ்சாயத்தில் ஈடுபட்டார்கள். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை தீர்மானிப்பதில் எடப்பாடி தரப்பு மிகவும் பலமாக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் என கூறியிருக்கிறது. ஆனால் ஓ பன்னீர்செல்வம் தரப்போ முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை அறிவிக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளது.

 

இதன் பின்னணியில் ஓ பன்னீர்செல்வம் முத்தரப்பு கூறுவது என்னவென்றால், 74 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக இருக்கும்போது அவரை ஒதுக்கி வைத்துவிட்டு, எடப்பாடி பழனிச்சாமி தன்னை மிகப்பெரிய ஆளுமையாக நடத்தியுள்ளார். விழா நடக்கும்போது துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அந்த இடத்தில் இருந்தபோது தனியாக நிற்கச் சொல்லி சார் அவமானப்படுத்தி விட்டார்கள் என ஓபிஎஸ் தரப்பு வெளிப்படையாகவே கூறியுள்ளது.

 

மேலும் ஓ பன்னீர் செல்வத்தை அவமரியாதை செய்து உள்ளார் என அவர் சார்பில் குற்றச்சாட்டு எழும்பியுள்ளது. அரசு விழா நடக்கும்போது, முதலமைச்சர் இருக்கிறார் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிற துணை முதலமைச்சர் இருக்கிறார் ஆனால் கட்சிக்குள் இருக்கும் பிரச்சனையை உள்கொண்டு துணை முதலமைச்சராக ஓ பன்னீர்செல்வம் தனியாக நிறுத்தியது மிகவும் கேவலமான ஒரு விஷயம் என ஓ பன்னீர்செல்வம் தரப்பு அந்த நிகழ்விலேயே கூறிவிட்டு வீட்டுக்கு சென்று உள்ளது.

 

இதன் பிரதிபலிப்புதான் தொடர்ந்து சீனியர் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும் ஓ பன்னீர்செல்வம் வீட்டிலும் பேசியுள்ளார்கள். கடைசியாக எதுவாக இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் முடிவு எடுக்க முடியும். அதற்கு முன்பு அரசியல் சூழ்நிலை மாறும். எடப்பாடி பழனிச்சாமி பெரிய ஆள் என்றால் ஓ பன்னீர்செல்வம் பெரிய ஆள். ஆகவே இதை பெரிதுபடுத்த வேண்டாம் என கூறியுள்ளது.

 

இதன் தொடர்ச்சியாகத்தான் அதிமுக தலைமை ஒரு அறிக்கை வெளியிட்டது. இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு தென்மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட சிலர் பேசி வந்தாலும், எடப்பாடி பழனிச்சாமி உள்ள கொங்கு மண்டலத்தில் ஓ பன்னீர்செல்வம் சில மாவட்ட செயலாளர்களை கையில் வைத்து பேசி வருவதாக தகவல் உள்ளது. ஆளும் அதிமுகவில் மிகப்பெரிய முரண்பாடு நடந்து வருகிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.