Advertisment
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயபிரகாஷ் என்பவர் நேற்றிரவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.