தமிழ்நாடு சட்டசமன்றத்தில் கடந்த மாதம் 18,19 ஆகிய தேதிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொது மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கைகள் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் கூடிய சட்டமன்றத்தில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. நகராட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டதை திரும்பப்பெற வேண்டும் என முழக்கமிட்ட அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள், பின்னர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த அதிமுக, பாஜக (படங்கள்)
Advertisment