Skip to main content

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; திமுக - அதிமுக நேரடிப் போட்டி

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

admk and dmk participate erode byelection

 

பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் ஈரோட்டில் வேகம் எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் அறிவிப்புக்குப் பிறகு உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் ஈரோட்டில் அமலுக்கு வந்தது. அதன்படி அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் படங்கள் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள தலைவர்களின் சிலைகள் ஆகியவை மறைக்கப்பட்டதோடு, வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடமும் அதீத வேகம் உருவாகியுள்ளது. 

 

திமுக கூட்டணியில், ஈரோடு கிழக்கு காங்கிரஸின் சிட்டிங் சீட் என்ற அளவுகோலில் இங்கு மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அழகிரி கூறியிருந்தாலும், திமுக தரப்பில் இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. அதேசமயம், காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் என்றால் அது ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். குறிப்பாக இளங்கோவனே போட்டியிட விருப்பம் இருந்தால், காங்கிரசுக்கு கொடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து பேச்சுவார்த்தைகள் எழாத நிலையில், திமுக நேரடியாகப் போட்டியிடவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

 

ஈவிகேஎஸ் இளங்கோவன் ஏற்கனவே எம்.பி.யாக; மத்திய அமைச்சராக; கட்சியின் தமிழகத் தலைவராக இருந்து தேசிய அளவில் தலைவர்களில் ஒருவராக இருக்கும் இச்சூழலில், காங்கிரஸில் வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கும் சூழலும் இருக்கிறது என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல்,  2024 இல் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியை அவர் விரும்புகிறார் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு சீட் என்ற அடிப்படையில் அக்கட்சி விரும்பிய ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால், அப்போது ஈரோடு தொகுதியை எதிர்பார்த்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனியில் போட்டியிடும் நிலை ஏற்பட்டது. ஆனாலும், தனது மகன் நின்று வெற்றிபெற்ற தொகுதியில் மீண்டும் அவரோ அல்லது அவரது குடும்பத்தைச் சார்ந்தவரோ போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

 

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என்ற பிளவுகள் இருந்தாலும் மேற்கு மண்டலத்தில் எடப்பாடி கைதான் ஓங்கி இருக்கிறது. அந்த அடிப்படையில் அதிமுகவில் நேரடியாக வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். ஏற்கனவே இங்கு கூட்டணி அமைத்து போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரான ஜி.கே.வாசனை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் அடங்கிய குழு இன்று (19 ஆம் தேதி) காலை அவரது சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் சந்தித்துப் பேசினார்கள். 

 

அப்போது இடைத்தேர்தல் செலவு ஏறக்குறைய 20 'சி' யை தாண்டும் என்பதை மனதில் வைத்து வேட்பாளரை அறிவிக்க வேண்டி உள்ளது. அப்படி செலவு செய்ய தமிழ் மாநில காங்கிரஸ் தயாராக இருக்கிறதா என்ற கருத்துக்கள் அவர்கள் பேச்சில் இடம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. ஜி.கே.வாசனும் அதிமுகவே போட்டியிட இசைவு காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.  

 

ஒருவேளை அதிமுக போட்டியிட்டால் எடப்பாடி பழனிச்சாமி, ஈரோடு அதிமுக மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை களமிறக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என நேரடிப்போட்டி ஈரோட்டில் உருவாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.