Skip to main content

அ.தி.மு.க. - அ.ம.மு.க. நிர்வாகிகள் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

 

 


அ.தி.மு.க.வைச் சேர்ந்த தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் ஒன்றியம் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் எஸ்.பி.டி.சுந்தர்ராஜன் தலைமையில் அ.தி.மு.க. - அ.ம.மு.க. கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். 

 

dmk



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் எஸ்.பி.டி.சுந்தர்ராஜன் தலைமையில், அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த திருச்செந்தூர் ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.பரிசமுத்து, நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி சித்ரா பரிசமுத்து, திருச்செந்தூர்  1வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி வி.ராமலட்சுமி - நல்லூர் ஊராட்சி செயலாளர் வடிவேல், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எஸ்.வேல்குமார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.


 

தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ., மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட பொருளாளர் ராமநாதன்,  மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர் சொர்ணகுமார்,  மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்சினோ, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கிருபாகரன், ஊராட்சி மன்றத் தலைவர் இளையராஜா ஆகியோர் உடனிருந்தனர்.


 

சார்ந்த செய்திகள்