Skip to main content

அதிமுகவுடன் டிடிவி இணைந்தால் தான் உள்ளாட்சி தேர்தலா?

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின்  பதவிக்காலம்  2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசும் , உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழக மாநில தேர்தல் ஆணையமும் அவ்வப்போது ஒரு சில காரணங்களைக் காட்டி தேர்தல் நடத்தாமல் உள்ளது . இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தால் மற்றும் புயல் உள்ளிட்ட அனைத்து காரணங்களையும் நீதிமன்றத்தில் கூறி கால அவகாசத்தைப் பெற்று வருகிறது . இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்  மாநில தேர்தல் ஆணையம் மே மாத இறுதியில் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக அரசு சார்பில் பிரமாண  பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

 

 

SASIKALA

 

 

அதில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு இன்னும் செய்யாததாலும் , இந்திய தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலை  தமிழக மாநிலத்தேர்தல் ஆணையம் பெறாததால் தற்போதைக்கு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது  என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆகையால் உள்ளாட்சித்தேர்தல் மீண்டும் தள்ளிப்போகியுள்ளது . அதனைத் தொடர்ந்து அதிமுக அரசு தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவுகளுக்கு பின்னரே அதிமுக அரசு  உள்ளாட்சி தேர்தலை சந்திக்கலாமா? என்ற நிலைப்பாட்டை எடுக்க உள்ளது . மேலும் அதிமுகவுடன் டிடிவி தினகரன்  தலைமையிலான அமமுக கட்சி இணையும் பட்சத்தில் அதிமுக தலைமை உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது . அதே போல் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா சிறையில் இருந்து  வெளி வர வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகின, எனவே அதிமுக கட்சித் தலைமை அவரின் ஆதரவுடனும் உள்ளாட்சி தேர்தலை சந்தித்து வெற்றி பெற  ஆயத்தமாகி வருவதாக அரசியல் கட்சி வட்டாரங்கள்  தகவல்கள் தெரிவிக்கின்றனர். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் வெற்றியை மட்டும் கருதி செயல்படும் அதிமுகவின் முயற்சி தேர்தலுக்கு பின்பு  எப்படி அமையும் என்று  பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.