தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்படி, 110வது வார்டு வேட்பாளர் டாக்டர் ராஜசேகரை ஆதரித்து வைகுண்டபுரம், 113 வது வார்டு பாஜக வேட்பாளர் மஞ்சு பார்கவி, 112வது வட்டத்தைச் சேர்ந்த முத்துராஜ், 109வது வட்டத்தில் பாஜக வேட்பாளர் நதியா சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் போது ஒரு இடத்தில் அவர் ஒரு தேனீர் கடையில் மக்களுக்கு டீபோட்டுக் கொடுத்தார்.

Advertisment